புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 25, 2023)

சந்தோஷத்திற்காக பிரயாசப்படுகின்றவர்கள்

சங்கீதம் 16:11

உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்மு டைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.


தன் குடும்பம் சந்தோஷமாய் வாழ வேண்டும். தன் சந்ததி வளமாய் இருக்க வேண்டும், பிள்ளைகள் நிறைவடைய வேண்டும் என்ற நோக் கத்துடன், ஒரு மனிதனானவன் அநேக வருடங்களாக இரவு பகலாக அயராது உழைத்து வந்தான். குடும்பத்தோடு இருந்து அமைத்தியாக ஒரு ஆகாரத்தை உண்ணவோ, பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லவோ, அவர்களு டைய விசேஷ நிகழ்வுகளில் பங்கு பெற்றவோ அவனுக்கு நேரமில்லா திருந்தது. இவை எல்லாவற்றிலும், தான் தன் குடும்பத்தின் சந்தோ ஷத்திற்காகவும், பிள்ளைகளின் எதி ர்காலத்திற்காகவுமே அரும்பாடு படுகின்றேன் என்பது அவனுடைய நியாயமாக இருந்தது. அவன் ஓய்வு பெறும் நாட்கள் அண்மித்ததும் அவன் தன் பிரயாசத்தின் பலனை அடைந்து கொண்டான். அவன் விரும்பியதுபோல தன் உலக ஆஸ்திகளை பெருக்கிக் கொண்டான். அதுமட்டுமல்ல, பிள்ளைகளின் வாழ்க்கையிலே பெற்றோர் வேண்டும் என்று இருந்த காலம் தணிந்து போயிற்று. குடும்ப ஐக்கியம் இல்லாமற் போயிற்று. சந்தோஷமாய் வாழ வேண்டும் என்று அலைந்து திரிந்து தன் காலத்தை வீணாக்கி விட்டேன் என்பதை அவன் உணர ஆரம் பித்தான். பிரியமானவர்களே, மனிதர்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்ற த்திற்காக பிரயாசப்படுவதில் தவறில்லை. ஆனால், மனிதனுடைய எல்லா பிரயாசமும் அவனுக்கு சந்தோஷத்தை கொடுப்பதில்லை. பிள் ளைகளின் வாழ்விற்காக உழைக்கின்றோம் என்று ஓடும் பெற்றோர்கள், பிள்ளைகளின் நாளாந்த வாழ்க்கையில் தாங்கள் உறுதியாக பிணைக்க ப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து, அவர்களை விளை யாட்டுப் பொருட்களாலும், நவீன சாதனங்களாலும், பரிசுப் பொருட்க ளினாலும் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றார்கள். ஒரு மனிதனானவன் எதை நாடி ஓடுகின்றானோ அவன் அதை பெற்றுக் கொள்கின்றான். இந்த உலகத்தின் போக்கினால் நன்மைகள் உண்டாகும் என்று அதன் வழியியிலே போகின்றவன் இந்த உலத்திற்குரியவைகளையே தன் பல னாக பெற்றுக் கொள்கின்றான். இந்த உலகம் தரக்கூடாத சந்தோஷ த்தை நிறைவாக தரும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை கைகொ ள்கின்றவன்;, பணமுமின்றி விலையுமின்றி,; தன் அனுதின வாழ்க் கையிலே நிறைவான சந்தோஷத்தையும் மனத்திருப்தியையும் பெற்றுக் கொள்கின்றான்.

ஜெபம்:

ஜீவ மார்க்கத்தை எனக்கு தெரியப் படுதின தேவனே, உணர்வற்ற வாழக்கை பின்பற்றி, நீர் கொடுத்த நாட்களை நான் விரையப்படுத்தாமல், உமக்குள்ளே நிறைவாக வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நெகேமியா 8:10