புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 23, 2023)

மறைதிருக்க முடியாது

எபேசியர் 5:16

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.


இந்த சமுகம் மிகவும் கொடூரமானது. நன்மையும் வேண்டாம், தீமையும் வேண்டாம். நானும் என்பாடும் என்று வாழ்ந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை என்று கூறி ஒரு மனிதனானவன், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டான். சில வேளைகளிலே, நம் வாழ்வில் ஏற்படும் உபத்திரவங்கள் இப்படியாக நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது. நாம் கோணலும் மாறுபாடுமுள்ள சந்ததி நடுவே வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என்று சத்திய வேதம் கூறு கின்றது. உலகம் உங்களைப் பகை த்தால், அது உங்களைப் பகைக் கிறதற்குமுன்னே என்னைப் பகை த்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன் னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது என்று ஆண்டவராகிய இயேசு கூறியி ருக்கின்றார். உலகம் தன்னை பகைத்தது என்று கூறி ஆண்டவராகிய இயேசு இந்த உலத்தை தள்ளிவிடவில்லை. ஒருவனும் கெட்டுப்போ காமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, தம்மைத் தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார். எனவே, அவருடைய சிநேகிதர்களாகிய நாமும், அவரைப் போல மாற வேண்டும். சமுகம் நம்மை பகைக்கின்றது என்று கூறி, நம்முடைய நன்மைகளை புதைத்து வைக்க முடியாது. நாம் பெற்ற தலாந்துகளை நாம் பெருக்குகின்றவர்களாக காணப்பட வேண் டும். நாம் கனியற்ற மரம்போல வாழமுடியாது. மகா வறட்சியான கால த்திலும், இலையுதிராத மரம் போல, நற்கனிகளைக் கொடுக்கின்ற வர்களாக நாம் மாற வேண்டும். சில வேளைகளிலே சமுகமானது நமக்கு மகா வறட்சியாக காலம் போல தோன்றலாம். அதனால், நாம் நம் நற்கனிகளை கொடுக்காமல் இருப்பது சரியாகுமோ? நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது என்று ஆண்டவர் இயேசு கூறியிரு க்கின்றார். எனவே காலத்தை விரையாமாக்காதிருங்கள்.

ஜெபம்:

அதிக கனிகளை கொடுக்கும்படி என்னை சுத்திகரிக்கும் தேவனே, நான் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களை ப்போலக் கவனமாய் நடந்துகொள்ளும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-2