புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 19, 2023)

தேவனுடைய கற்பனைகள்

1 யோவான் 5:3

அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.


சவுல் ராஜா அரசாண்ட இரண்டாம் வருஷத்திலே, எதிரிகளாகிய பெலி ஸ்தியர் இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இஸ்ரவேலர் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்;. அதனால் நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ராஜா ஜனங்களுக்கு ஆணை யிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வள வேனும் போஜனம்பண்ணாதிருந் தார்கள். ராஜாவின் கட்டளையை அறியாதிருந்த அவனுடைய குமாரனாகிய யோனத்தான், அன்றைய தினம் அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக் கொண் டான்;. அதை அறிந்த ராஜா அவன் தன் குமாரன் என்றும் பாராமல், ராஜ கட்டளையை மீறினபடியால் அவன் சாக வேண்டும் என்று கூறிக் கொண்டான். ஆனால், ஒன்றுமில்லாதிருந்த அவனை சமஸத இஸ்ரவே லுக்கும் ராஜாவாகி, உயர்த்தி வைத்த, சர்வவல்லமையுடைய தேவனா கிய கர்த்தரின் கட்டளையை அவன் அசட்டை பண்ணி, மீறி நடக்கின்ற வனாக இருந்தான். அது மட்டுமல்லாமல், தன் மீறுதல்களை ஏற்றுக் கொள்ளாமல் அவைகளை நியாயப்படுத்துகின்றவனுமாக இருந்தான். நாம் யாவரும் தேவனை அறியாத நாட்களிலே, இவ்வுலக வழக்கத்திற் கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடி யாகவும் நடந்துகொண்டோம். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற் காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களை ப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். நம்மில் அன்பு கூர்ந்த பிதாவாகிய தேவனோ, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவ ரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய் தார். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. கிறிஸ்து விலிருந்த ஆவியை அவர் நமக்கு கொடுத்து, நம்மை தம்முடைய குமாரரும் குமாரத்திகளுமாக ஏற்றுக் கொண்டார். எனவே, நாமும் சவுல் ராஜாவை போல மீறுதல்களை நியாயப்படுத்தாமல், தேவனுக்கு பிரிய முள்ள பிள்ளைகளாக அவருடைய கற்பனைகளை மனதார கை கொள்வோமா.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, இத்தனை மகத்துவமுள்ள பதவியை நீர் எனக்கு கொடுத்திருக்கின்றீர். அதை உணர்ந்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுகின்றவனாக வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 சாமு 13:13-14