புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2023)

கர்த்தரிடத்திற்கு வழிநடத்துங்கள்

யோவான் 3:30

அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.


இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப்போ னீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்தி ரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்ல வென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன் மையுள்ளவனையே என்று உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்றார். அந்த மேன்மையுள்ள யோவான் ஸ்நானன் மெசியாவாகிய இயேசு வுக்கு வழியை ஆயத்தப்படுத்த வந்தான். அவன் இயேசுவை தன் வாழ்வில் மேன்மைப்படுத்தினான். அவன் இயேசுவை குறித்து கூறும் போது: எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெ ரிப்பார் என்றான். ஆண்டவராகிய இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறும்படி யோர்தானுக்கு வந்தபோது, யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். மறுநாளிலே யோவானும் அவனு டைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, இயேசு நடந்துபோகிறதை யோவான்ஸ்நானன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். இப்ப டியாக தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் முன்னிலையில் தன்னைத் தாழ்த்தி, அவர்களை ஆண்டவராகிய இயேசுவோடு சேர்ப்பதிலே யோவான் ஸ்நானனின் சந்தோஷம் பூரணமாயிற்று. பிரியமானவர்களே, நாம் ஊழியர்களாக இருந்தாலும், விசுவாசிகளாக இருந்தாலும், நம்மு டைய எல்லைகளை விருத்தி செய்வதிலும், நம்முடைய பெயரையோ, சபையின் பெயரையோ பிரபல்யமாக்குவதிலும் நேரத்தை செலவி டாமல், ஆண்டவர் இயேசுவோடு மற்றவர்களை சேர்ப்பதிலே சந்தோ ஷமடைகின்றவர்களாக இருக்க வேண்டும். இயேசுவோடு சேர்க்காதவன் சிதறடிக்கின்றான். அவரோடு ஒட்டப்படாத கிளை தானாய் கனி கொடு க்க மாட்டது. எனவே நாம்; எப்போதும் நம்மைத் தாழ்த்தி, ஆண்டவர் இயேசுவின் நாமத்தை உயர்த்துவோமாக.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, என்னுடைய விருப்பம் அல்ல, உம்முடைய சித்தத்தை நான் நிறைவேற்றுகின் றவனாக வாழ தாழ்மையுள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:6