புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 24, 2023)

பரத்திலிருந்து வரும் ஞானம்

நீதிமொழிகள் 9:10

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.


சிறு வயதிலிருந்தே தங்கள் மகனானவன் சீராக கல்வி கற்க வேண்டும் அவன் இருதயத்திலே கல்வியே முதன்மையானது என்று பெற்றோர்கள் பதிய வைத்தார்கள். அப்படியே அந்த மகனானவனும் படித்து, மேல்ப டிப்புக்காக உலகிலேயே சிறந்து விளங்கிய பல்கலைகழமொன்றிலே படித்து, அதிவி சேஷட சித்தி பெற்று, தேசத்;திலேயே ஒரு சிறந்த விற் பனையாளராக வேலை புரிந்து வந் தான். அதாவது புதிதாக உற்பத் தியாக்கப் படும் பொருட்கள் வாழ் விற்கு அவசியமானதோ, அவசி யமற்றதோ, கொள்பவர்கள் ஐசு வரியமுள்ளவர்களோ அல்லது சாராசரி உழைப்பாளிகளோ, அவைகளினாலே வரும் பின்விளைவுகள் எப்படிப்பட்டதோ என்பது ஒரு பக்கமிருக்க, எப்படியாவது மக்களின் மனதை கவர்ந்து, அவை யாவ ற்றையும் சந்தைப் படுத்தும் யுக்திகளை அவன் மிகவும் அறிந்திருந் தான். இத்தகைய யுக்திகளை உலக அறிவு அல்லது ஞானம் என்று மனி தர்கள் கருதுகின்றார்கள். இது உங்களுக்கு எப்படியாக தோன்றுகி ன்றது? சில தேசங்களிலே அநீதி செய்தவர்களை நீதிமான்கள் என்று நிரூபிப்பதற்காக நீதிம ன்றங்கிலே எதிர்த்து வழக்காடுகின்றார்கள் என்று செய்திகள் வாயிலாக அறிகின்றோம். இப்படியாக இந்த உலகிலே கல்விமான்களாக கருதப்படுகின்ற சிலர் பரிசுத்த வேதாகமகம் கூறும் வார்த்தைகளுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றார்கள். தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்தி ப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ! புரிதான த்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாய த்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! (ஏசாயா 5:20-23) என்று பரிசுத்த வேதாமம் கூறுகின்றது. கர்த்தருக்கு பயப்படு தலே ஞானத்தின் ஆரம்பம். எனவே, நீங்கள் எந்த வயதுடையவர்களா னாலும் மெய்யான தேவனாகிய கர்த்தர் இருக்கின்றார் என்று அறிந்து பொல்லாப்பை விட்டு விலகுங்கள். தீமையை விட்டு விலகுவதே செம்மை யானவர்களுக்குச் சமனான பாதை. தன் நடையைக் கவனித்திருக்கிற வன் தன் ஆத்துமாவைக்காக்கிறான். எனவே உங்கள் கால்களுக்கு தீப மாகவும், பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கும் வேத வார்த்தை களின் வழியிலே நடவுங்கள். பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்க முமுள்ள தாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லா ததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, இந்த உலகத்தினால் உண்டாகும் அறிவை பற்றிக் கொள்ளாமல், உமக்கு பயந்து, பரத்திலிருந்து வரும் மெய் ஞானத்தை பற்றி வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 4:23