புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 10, 2023)

ஆரம்பத்திலே கொண்ட வைராக்கியம் எங்கே?

எபிரெயர் 3:14

நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்து வினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்


சிறு பிராயத்திலிருந்து தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடக்கும் படிக்கு பயிற்சிவிக்கப்பட்ட வாலிபனொருவன், தன் உயர்கல்வியை வெற் றிகரமாக முடித்த பின்பு, குறிப்பிட்ட கம்பனியொன்றிலே நல்ல தொரு உத்தியோகத்திலே அமர்ந்தான். அவனுடைய வாழ்விலே பிரதிஷ;டை யும், அர்ப்பணிப்பும் தாரளாமாக இருந்தது. கம்பனியிலே புதி தாக ஒரு நண்பனை சந்தித்தான். அவர்களுக்கிடையே நட்பு வளர்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர், அந்த நண்பனானவன், அந்த வாலிபனை நோக்கி: குறிப்பிட்ட ஒரு நாட்டி ற்கு, உல்லாச பிரயாணம் செல்ல த்திட்டமிட்டிருக்கின்றேன். நீயும் என்னோடு இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண் டான். நண்பன் மேல் வைத்த நன் மதிப்பினால், அந்த வாலிபனா னவன், சிந்திக்காமல், ஆம், நான் வருகின்றேன் என்று கூறிவிட்டான். இருவரும் உல்லாசப் பயணத்திற்குரிய ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் வேளையிலே, தகப்பனானவனர், அந்த வாலிபனை நோக்கி: மகனே, நீ போகும் இடத்தில் ஞாயிறு ஆராதனையைக் குறித்து ஏதாவது திட்டம் உனக்கிருக்கின்றதா என்று கேட்டார். அதற்கு அவன் மறுமொழியாக: இரண்டு கிழமை ஆராதனைகளில் கலந்து கொள்ளாவிட்டால் ஏதும் குறையப் போவதில்லை. என் நண்பனைப் பாரு ங்கள், அவன் வருடத்தில் சில நாட்கள் மட்டும், ஆராதனைக ளிலே கலந்து கொள்வான். அவன் எவ்வளவு செழிப்பாக வாழ்கின்றான் என்று கூறினான். அதை கேட்ட தகப்பனானவர், தேவனுடைய காரியங்களைக் குறித்த தன் மகனானின் மனநிலையை அவ்வளவு சீக்கிரமாய் மாறிப் போனதைக் கண்டு மனவேதனை அடைந்தார். சின்ன வயதி லிருந்து வாரந்தோறும் நீ ஜெபக்கூட்டங்களிலும், ஆராத னைகளிலும் தவறாமல் சென்று வந்திருக்கின்றாய். நீ இப்போது வய திற்கு வந்து விட்டாய். வாழ்வின் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நாட்களில் வாழ்கின்றாய். எனவே எச்சரிக்கையாய் நடந்து கொள் என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, இந்த உலகிலே செழிப்பாக தோன்றும் நட்புக்கள் எல்லாம் தேவனுக்கு பிரியமானவை களல்ல. அவை பார்வைக்கு நன்றாக இருக்கும், படிப்படியாக உங்கள் பிரதிஷ;டையி லிருந்து உங்களை வழுவிப்போகப் பண்ணிடும். எனவே, மிகவும் விழிப்புள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு அழைத்த தேவனேஇ நீர் எனக்குத் தந்த மேன்மையை நான் எந்தக் காலத்திலும், எந்தப் பருவத்திலும் இழந்து போகாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:14