புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 23, 2023)

ஆகாத சுபாவங்கள் மாறும்

மத்தேயு 7:11

பரலோகத்திலிருக்கிற உங் கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?


'அவன் ஒரு நல்ல மனுஷன் ஆனால் அவனுடைய வாய் சரியில்லை' என்று மனிதர்கள் சிலரைக் குறித்து கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். தேவ பிள்ளைகள் மத்தியிலும் இவ்வண்ணமாக சில விசுவாசிகள் இருப்பதைக் காணாலாம். நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறு கிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக்கூடிய வனுமாயிருக்கிறான். பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும் படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது. நாவினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம் (யாக்கோபு 3). நாம் பற்பல காரியங்களை தேவனிடத்திலே கேட்டு பெற்றுக் கொள்கின்றோம். ஏறத்தாழ அவைகளில் யாவும் இந்த உலக வாழ்க்கைக்கும், சரீரத்திற்கும் உரியதாகவே இருக்கின்றது. சில வேளைகளிலே அவை களை பெற்றுக் கொள்ளும்படிக்கு விசுவாசிகள் உபவாசித்து ஜெபிக்கி ன்றார்கள். தேவ சமுகத்திலே பொருத்தனைகளை செய்து, வாஞ்சித்த காரியங்கள் வாய்க்கும் போது, பொருத்தனைகளை குறித்து காலத்தில் நிறைவேற்றி, பெருந்தொகையாக காணிக்கைகளையும் கொடுக்கின்றா ர்கள். அழிந்து போகும் இந்த உலகத்தின் காரியங்களுக்காக அப்படி செய்தால், அழியாத பரலோக வாழ்விற்காக நாம் எவ்வளவு அதிகமாக வாஞ்சிக்க வேண்டும். நாவடக்கத்திற்காக ஜெபியுங்கள், கோப சுபா ங்கள்; நீங்க வேண்டுதல் செய்யுங்கள். மறைவான பாவங்கள் நீங்க விண்ணப்பம் பண்ணுங்கள். ஊக்கத்தோடு கேளுங்கள். பரம பிதா நிச்சயமாக பதிலளிப்பார்.

ஜெபம்:

பரலோக தகப்பனே, ஆண்டாண்டு காலமாக என்னுள் மறைந்திருக்கும் ஆகாத சுபாவங்களை நீர் அறிந்திருக்கின்றீர். அவை யாவற் றையும் நான் மேற்கொள்ளும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 43:19