புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 21, 2023)

வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்

ரோமர் 2:7

சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.


பாவத்திலிருந்து மீட்படையும் வழியை கண்டடையும்படி பிதாவாகிய தேவனால் வாக்களிக்கப்பட்ட மீட்பரின் வருகைக்காக ஆண்டாண்டு காலமாக தேவ மனுஷர்கள் காத்திருந்தார்கள். ஒவ்வொரு சந்ததியிலும் வாழ்ந்த பரிசுத்தவான்கள் தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றி, அவர்களுடைய காலம் நிறைவேறின போது, விசுவாசத்தோடு இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள். எடு த்துக்காட்டாக, நோவா, ஆபிரகாம் போன்றவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக நடந்து கொண்டார்கள். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாக இருந்தான். எலியா, ஏரேமியாக போன்ற தீர்க்கதரி சிகள் தங்கள் காலத்திலே பல பாடு களை சகித்தார்கள். இப்படியாக தேவ அழைப்பை பெற்ற தேவமனிதர்கள் யாவரும் தங்கள் பணியை நிறைவேற் றினார்கள். தேவனானவர் தானியேலை நோக்கி: நீயோ வென்றால் முடிவுவருமட்டும் போயிரு. நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றார். பிதாவாகிய தேவன் முன்குறித்த காலத்திலே மீட்பராகிய இயேசு பூவுலகி ற்கு வந்தார். அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறியது. மீட்பராகிய இயேசு தம்முடைய திருப்பணியை நிறைவேற்றி பரலோகத்திற்கு எழுந் தருளினார். 'நான் மறுபடியும் வந்து உங்களை என்னோடு சேர்த்துக் கொள்வேன்' என்று வாக்குரைத்துச் சென்றார். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக, அவருடைய பரிசுத்தவான்கள், தங்கள் திரு ப்பணியை நிறைவேற்றி, அவருடைய இரண்டாம் வருகையை எதிர் பார்த்து, விசுவாசத்தோடு, இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள். நாமும் அவ்வண்ணமாகவே நமக்கு கொடுக்கப்பட்ட திருப்பணியை நிறைவேற்றி முடிக்க வேண்டும். கர்த்தருக்கு சித்தமானால் நன்மை செய்து பாடநுபவிக்க நேர்ந்தாலும், சலிப்படையாமல், சோர்ந்து போகா மல், நம்முடைய நாட்களில் தேவ சித்தத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் பொறுமை யோடு முன் செல்ல வேண்டும். கர்த்தர் கூறிய வாக்கு நிறைவேறும்! அவர் மறுப டியும் வந்து நம்மை தம்மோடு சேர்த்துக் கொள்வார். எனவே விசுவாசத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.

ஜெபம்:

என் நாட்களை அறிந்த தேவனே, காலங்கள் கடந்து சென்றாலும் நான் சோர்ந்து இளைப்படையாமல், நீர் எனக்கு தந்த பொறுப்பை முழு மனதோடு நிறைவேற்றி முடிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:1-3