புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 04, 2023)

சேனைகளின் கர்த்தர்

சங்கீதம் 46:11

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்;


இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிரு பத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு ராஜா, அம்மெதா த்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப் படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனு டைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். ஆமான் என்பவன், தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்ப டுத்தி, ராஜ்யமெங்கும் இருக்கிற தேவனுடைய ஜனங்களை சங்க ரிக்க அவன் வகைதேடினான். அதற்காக சதித்திட்டம் செய்து, அதற்கு வேண்டிய பணத்தையும், ராஜாவின் அனுமதியையும் பெற் றுக் கொண்டான். ஆனால் அவனோ, எல்லாவற்றிற்கும் மேலாக தேவாதி தேவன் ஆளுகை செய்கின்றார் என்பதையும் அவர் தம்முடைய ஜனங்க ளை விசாரிக்கின்றார் என்பதையும் அறியாதிருந்தான். தங்கள் அக்கிர மங்களினிமித்தம் அடிமைத்தனத்திற்குற்பட்ட தேவ ஜனங்கள், தேவ தயவைப் பெற்றுக் கொள்ளும்படி, தங்கள் தேவனை நோக்கிப் பார்த்து, உபவாசித்தார்கள். தேவாதி தேவன் தாமே, ராஜாவின் மனதை மாற்றிப் போட்டார். ஆமானுடைய தந்திரங்கள் அவனுக்கும் அவன் குடும்பத்தா ரெல்லோருக்கும் அழிவாக மாறியது. ஆம் பிரியமானவர்களே, எந்தப் பெரிய ராஜ்யமோ பெரிய ராஜாவோ, தேவன் நியமித்த திட்டத்திற்கு எதிராக செயற்பட முடியாது. சர்வ வல்லமையுள்ளவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். இந்த இரகசியத்தை பூமியை ஆளுகின்ற அதிகாரிகள் அறியாதிருக்கலாம். அதை அறிந்த நாம், நமக்கு எதிராக செயற்படும் அதிகாரங்களை குறித்து சற்றும் கலங்காமல், நம்மைத் தாழ்த்தி தேவனாகிய கர்த்தரை நோக்கி பார்போமாக. அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார். வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார். இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். என்று வேத வசனங்கள் வழியாக தேவன்தாமே நம்மை பெலப்படுத்து கின்றார். எனவே, தேசத்திலே மாறுதல்களை விரும்புகின்றவர்கள், தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள். உங்கள் வழிகளை அவரிடம் ஒப்புக் கொடுங்கள். தேவ சமுகத்திலே ஜெபத்திலே தரித்திரு ங்கள். பெரிதான விடுதலையை தேசத்திலே உண்டாக்குவார். சேனை களின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.

ஜெபம்:

எங்கள் அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமான தேவனே, உம்முடைய பலத்த கிரியைகளை நாம் காணும்படி உம்முடைய பாதத்திலே அமர்ந்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:9-21