புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 27, 2023)

அழியாத கனமகிமை

2 கொரிந்தியர் 4:18

ஏனெனில், காணப்படுகிறவை கள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.


பரலோக மகிமையை துறந்து, தன்னைத் தாமே தாழ்த்தி, அடிமையின் ரூபமெடுத்து, இந்தப் பூவுலகில் உதித்த தேவகுமாரனாகிய இயேசு, எதற்காக வந்தார்? நம்மிடத்திலே விருந்து கொள்ளும்படி வந்தாரா? தான் பிரபல்யமடையும்படி வந்தாரா? விருந்துகளில் முதன்மையான இடங் களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும் பெற்றுக் கொள்ள வந்தாரா? சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் போதகரே என்று அழைக்கப்படும்படி வந்தார? ஆண்டவராகிய இயேசு மனுஷரால் வரும் மகிமையை ஏற் றுக் கொள்ளுகிறதில்லை. அப்படியானால் அவர் ஏன் இந்தப் பூமிக்கு வந் தார்? ஒருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கே பிதாவாகிய தேவன் தம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவை இந்த பூவுலகிற்கு அனுப்பினார். இழந்தபோனதை மீட்டு இரடசிக்கவே ஆண்டவராகிய இயேசு இந்த பூமிக்கு வந்தார். பிதாவானவர் கற்பி த்தபடியே அவர் பிதாவானவருடைய சித்தத்தை முழுமையாக நிறை வேற்றினார். நாம் ஏன் தேவ அழைப்பை பெற்றிருக்கின்றோம்? ஏன் வேறுபிரிக்கப்பட்டோம்? உலக மகிமையை அடையும்படிக்காகவா? மனித அங்கீகாரத்பை பெற்றுக் கொள்ளும்படியாகவா? உலகத்திலே முதன்மையான இடங்களை பெற்றுக் கொள்ளும்படிக்காகவா? நமக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி, நம்முடைய எல்லைகளை விஸ்திரப்படுத்தும்படியாகவா? இல்லை, நாம் அதற்காக அழைப்படவி ல்லை. அப்படியானால் நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம்? இழந்து போன தேவ சாயலை பெற்றுக் கொண்டு, நித்திய ஜீவனிலே பங்கடையும்படி அழைப்பைப் பெற்றிருக்கின்றோம். அதை நாம் பெற் றுக் கொள்ளும்படிக்கு, ஆண்டவர் இயேசுவைப் போல, நம்மைக் குறித்ததான பிதாவாகிய தேவனுடைய திருச்சித்தத்தை நம் வாழ்விலே நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டும். அந்தப் பாதையிலே உண்டாகும் உப த்திரவங்கள், ஈடு இணையில்லாத நித்திய கனமகிமையை நமக்கு உண் டாக்கும். இந்த உலகிலே நாம் பெற்றுக் கொள்ளும் மகிமை இந்த உல கத்தினால் உண்டானதினால் அது உலத்தோடு அழிந்து போய் விடும். ஆனால் பிதாவாகிய தேவன்தாமே நித்திய கனமகிமையை நமக்கு தந் தருள்வார். அது ஒருக்காலும் அழியாதது. எனவே நாம் அழியாத நித் திய கனமகிமையையே வாஞ்சித்து தேடுவோமாக.

ஜெபம்:

நித்திய மகிமையை நான் அடையும்படிக்கு உம்முடைய திருக்குமாரனை அனுப்பிய தேவனே, இந்த உலகத்தினால் உண்டானவைகளை தேடாமல், பரலோக மகிமையை வாஞ்சிக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:7-8