புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 24, 2023)

நிஜமான வாழ்க்கை

சங்கீதம் 24:4

கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.


பார்த்தவர்கள் யாவருமே அருமையான நாடகம்! கதாபாத்திரமாக நடித் தவன் மிகவும் சிறப்பாக நடித்தான்! என்றும் ஆண்டவராகிய இயேசுவின் பாடுகளையும், மரணத்தையும் குறித்து குறுந்திரை நாடகத்தையும் குறி த்து பலரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஆண்டவர் இயேசுவைப் போல நடித்தவனின், இராப்போஜனத்திற்கு முன்பு, கர்த்தர் சீஷர்களுடைய கால்களை கழுவியது போல, தானும் கழுவினான். அந்தக் காட்சி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. ஆனால், அந்தக் காட்சிக்கும் அதை நடித்தவனுடைய நிஜமான வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. நடிப்பவர்கள், பணத்திற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும் தங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து கொள்ள எதையும் நன்றாக நடித்துக் காண்பிப்பார்கள். ஆனால் கிறிஸ்துவின் சாயலிலே வளரும் வாழ்க்கையை நாம் நடித்து காண்பிக்க முடியாது. அது நம்முடைய நிஜமான வாழ்க்கையாக இருக்க வேண்டும். மேடைகளிலும், திரை அரங்கிலும் மாத்திரமல்ல, சில மனிதர்கள், தங்கள் சொந்த வாழ்க்கையையும் நாடகமாக்கிக் கொள் கின்றார்கள். அதனால் ஒருவேளை சில மனிதர்களுடைய இருதயங்களை இவர்கள் கவர்ந்து கொள்ளலாம். ஆனால், இருதயத்தை ஆராய்ந்தறிக் கின்ற தேவனாகிய கர்த்தரின் முன்னிலையிலே அது மாய்மாலம் பண் ணுவதாக இருக்கும். மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன் பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக் குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வது போல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே. அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மஞ் செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயி ருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். கருப்பொருளாவது, நாம் தேவனுக்கென்று செய்யும் நற் கிரியைகள் முதலாவதாக தேவனால் அங்கீகாரம் பெற்றிக்க வேண்டும். அதை பெறுவதற்கு நம்முடைய இருதயம் தேவனுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

என் இருதயத்தின் தியானங்களை அறிந்த தேவனே, மனிதர்களுடைய அங்கீகாரத்தை பெறுவதைவிட உம்முடைய அங்கீகாரத்தை பெறும்படியாகவே நான் உண்மையுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:4