புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 16, 2023)

சீக்கிரமாய் கடந்து போகும் வாழ்க்கை

பிரசங்கி 12:13

காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனு க்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த சன்மார்க்கனான மனிதனொருவன், கல் வியிலும், விளையாட்டுத் துறையிலும், செய்யும் வேலைகளிலும் சிறந்து விளங்கினான். அவன் உடற்பெலமுள்ளவுனும், செல்வ செழிப்புள்ளவ னும், மனிதர்கள் மத்தியிலே நன்மதிப்பு பெற்றவனுமாக இருந்து வந் தான். பார்ப்பவர்கள் எல்லாம் 'பாரு ங்கள் வாழ்ந்தால் அவனைப் போல வாழ வேண்டும்' என்று கூறும்ப டிக்கு அவன் வாழ்க்கை நிறை வாக காணப்பட்டது. அவனுக்கு உண்டான உடல் பெலத்தினாலும், உலக ஞானத்தினாலும், ஐசுவரி யத்தினாலும் அவன் தனது தன்ந ம்பிக்கையை தன் வாழ்விலே மேன்மைபாராட்டி வந்தான். காலங்கள் கடந்து சென்ற போது, அவன் உடலிலே பெலன் குறைந்து போவதை அவன் கண்டு கொண்டான். உலக ஞானத்திலே அதிகமாக நம்பியிருந்த வன், தன் உடலிலே ஏற்பட்ட சில வியாதிகள் மருத்துவ அறிவுக்கு அப் பாற்பட்டதாக இருந்ததால், அவனுக்கிருந்த பெருந்தொகையான ஐசுவரி யமும் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். மருத்துவமனையிலே ஆறடி நீளமும், நாலடி அக லமுமான கட்டிலே அவனுக்குரிய உறைவிடமாகிவிட்டது. கற்றவைகள் யாவுமே மறந்து போய்விட்டான். முன்பு போல பேச முடியவில்லை. தன் உள்ளத்திலே ஒரு வெற்றிடமிருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். மனித வாழ்வு எளிதில் உடைந்து போகின்ற பாத்திரம்போல இருக்கி ன்றது என்பதை அறிந்து மனச்சோர்வடைந்தான். அவன் தனது பெலனு ள்ள வாழ்நாட்களில் கர்த்தரை தேடுவது அநாவசியமானது என்று அச ட்டை செய்து அழிந்து போகும் இந்த உலகத்தின் அறிவிலும், பெல த்திலும் மேன்மைபாராட்டி வந்தான். பிரியமானவர்களே, மனுஷனு டைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் புஷ;பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற் போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது. எனவே, பெலன் குன்றிப் போக முன்னும், தீங்கு நாட்கள் வருவதற்கு முன்னும், உன் கண்களில் வெளிச்சம் குறைந்து வாழ்க்கையின் தீபம் அணைந்து போகும் முன்னும், மண்ணாணது மண்ணுக்கு திரும்பமுன்பும், சிருஷ; டித்த தேவனிடம் திரும் புங்கள். கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, காலம் கடந்து பெலன்குறைந்து போகும் நாட்கள் வருமுன், உணர்வடைந்து உம்மை பற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கையை வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 9:23-24