புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2023)

மனதின் யோசனைகள்

நீதிமொழிகள் 16:2

மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.


இந்த சனிக்கிழமை மாலை கணித ஆசிரியர் வெளியூருக்கு போகின்றார் எனவே ஞாயிறு காலை வகுப்பிற்கு வரும்படி கூறினார் என்று மகனானவனொருவன் தன் பெற்றாரிடம் கூறினான். அந்த ஆசிரியர் மிகவும் பிரபல்யமானவர். அவருக்கு நேரமே இல்லை. எனவே, ஞாயிறு காலை நீ கணித வகுப்பிற்கு போ. ஒருநாள் ஆலயத்திற்கு செல்லாவிட்டால் என்ன? மாலையிலே ஜெபம் பண்ணுவோம் என்று தாயானவள் தன் மகனாவனுக்கு கூறுவதை, அந்தத் தாயாளவளுடைய வயது சென்ற தகப்பனானவர் கேட்டுக் கொண்டிருந்தார். உடனடியாக தன் மகளை நோக்கி: உன்னுடைய மகனான வனிற்கு நீ என்னத்தை கற்றுக் கொடுகின்றாய்? ஒருநாள் கணிதபாட த்தை விட்டுவிடக்கூடாது ஆனால் ஒருநாள் தேவனை ஆராதிப்பதை விட்டு விடலாம் என்று கூறுகின்றாய். நீ எதற்கு முக்கியத்துவம் கொடு த்து அவனை வளர்க்கின்றாயோ, அவன் அதையே பற்றிக் கொள்வான். அதுமட்டு மல்ல, ஆண்டவர் இயேசுவிடம் அவன் சேருவதற்கு நீ தடையாக இருக்கின்றாய் என்பதை மறந்து போய்விடாதே, எனவே எச்சரிக் கையாயிரு என்று அவளை கண்டிந்து கொண்டார். பிரியமானவர்களே, ஊரிலே பிரபல்யமான ஆசிரியரை திருப்திப்படுத்த, அந்த தாயானவள், தன்னுடைய மகனுடைய வாழ்விலே எதையும் மாற்றிப்போட ஆயத்தமு ள்ளவளாக இருந்தாள். சற்று சிந்தித்துப் பாருங்கள். கல்வியைவிட தேவனைத் தேடுவதே முதன்மையானது என்று தன் மகனானவனுக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் கற்பித்துக் கொடுக்க ஒரு அருமையான சந்தர்ப்பம் அந்த தாயாளவளுக்கு கிடைத்தது. அந்த நல்ல சந்தர்ப்பத்தில், அவள் கல்வியே முதன்மையானது என்ற விதையை தன் பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே விதைத்துவிட்டாள். சிறுக விதைக்கும் அந்தத் தீமையான விதை, வளர்ந்து பாதகமான பின்விளைவுகளை உண்டு பண்ணிவிடும். அந்த தாயானவளின் உள்ளத்தில் முதன்மையான இட த்தை பெற்றிருப்பது எது? அவள் தன் பிள்ளைக்கு அழியாத நல்ல பங்கை கொடுக்கின்றாளா? சற்று சிந்தித்துப் பாருங்கள்! அத்தோடு நிறுத்தி விடாமல், என்னுடைய உள்ளத்தில் எது முதன்மையான இடத்தை பெற்றிக்கின்றது என்ற கேள்விளை கேளுங்கள். தேவ வசனத்தின் வெளிச்சத்திலே உங்கள் உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்கள் யோசனைகளை அறிந்திருக்கின்றார். எனவே அவை அவருக்கு ஏற்புடையதாக இருப்பதாக.

ஜெபம்:

என் மனதின் யோசனைகளை அறிந்த தேவனே, உம்முடைய வழியைவிட்டு தவறிப்போகும் யோசனைகளை என்னைவிட்டு அகற்றி, மேன்மையானவைகளை பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:7-8