புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 04, 2023)

ஆசைகளை நிறைவேற்றுவது அன்பா?

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.


வீட்டிலே, மகிழ்ச்சியான நாட்களிலே குடித்துச் குதுகளித்து சந்தோஷமாக இருக்க வேண்டும். துக்க நாட்களிலே துக்கத்தை மறப்பதற்கு, மதுபோதை கொள்ள வேண்டும். இப்படியாக வாழ்க்கையிலே ஏற்படும் வெற்றியிலும் தோல்வியிலும் மதுபானம் அருந்தி களித்திருக்க வேண்டும் என்று ஒரு மனிதனானவன் கூறிக்கொள்வான். அவன் நண்பர்களோடு சேர்ந்து குடித்து வெறித்திருக்கும் நாட்களிலே, தன் சின்ன மகனானவனை பிடித்து இதை குடி என்று அவனுக்கு கிண்ணத்தை கொடுப்பது போல பாசாங்கு செய்வான். அவனோ, அது வேண்டாம் என்று ஓடி ஒளிந்து கொள்வான். இந்தச் சம்பவமானது, வெறிகொண்ட தகப்பனானவருக்கு சுவாரசியமாகவே இருந்து வந்தது. மகனாவனனுடைய வாலிப நாட்கள் வந் தததும், இப்படியாக, ஒரு நாள் தகப் பனானவன் வெறித்திருக்கும் போது, தன் மகனானவனுக்கு கொஞ்சம் குடி என்று அவனை ஊக்குவித்து, எப்படியோ மகனானவனுக்கு தகப்ப னானவன் குடிக்க கற்றுக் கொடுதுவிட்டான்;. மகனானவனோ, தன் வாலி பநாட்களிலே, தன் நண்பர்களோடு சேர்ந்து குடித்து, வெறிக்க, பல களி யாட்டங்களிலே ஈடுபட ஆரம்பித்தான். இதனால் அவன் பல சீர்கேடான பழங்கங்களை தன் வாழ்விலே வழக்கமாக்கிக் கொண்டான். ஆனால், அந்த தகப்பனாவனோ, அதைக் குறித்து சற்றேனும் அக்கறையற்றவா னாக, தன் மகனானாவன் வாலிபத்தை உல்லாசமாக கழிக்கட்டும் என்று சொல்லி கொள்வான். அதாதவது, தன் மகனானவன் தன் வாழ்க்கை யை அழித்துப் போடுவதற்கு வழிவகுத்து கொடுப்பது, அந்த தகப்பனாவனுக்கு நன்மைனதாக தோன்றிற்று. பிரியமானவர்களே, பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. பிள்ளைகளின் எல்லா ஆசை இச்சைகளை நிறைவேற்றவிடுவது, உண்மையான அன்பு அல்ல. நல்ல தகப்பனானவன், தன் பிள்ளையானவன் நடக்க வேண்டிய நல்ல வழியை போதிக்கின்றான். உள்ளும் புறமும் நல்ல சுபாவங்களிலே வளரும்படிக்கு கருத்தோடு கற்றுக் கொடுத்து, தன் பிள்ளைகளுக்காக அனுதினமும் ஜெபிக்கின்றவனாக இருக்கின்றான். எனவே பிள்ளைகள் நடக்க வேண்டிய வழியை, நற் சுபாவங்களை சின்ன வயதிலிருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுங் கள். பிள்ளைகள் ஆண்டவராகிய இயேசுவினித்திற்கு சேருவதை தடுத்து நிறுத்தி உங்கள் மேல் ஆக்கினைளை குவித்துக் கொள்ளாதிருங்கள்.

ஜெபம்:

என்னை நேசிக்கின்ற பரம தந்தையே, தெய்வீக சுபாங்களை நான் பற்றிக் கொண்டு, அவைகளை நான் நேசிப்பவர்களுக்கு கற்றுக் கொடுக்க, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 3:12