புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 03, 2023)

மாறாத அன்பு

வெளிப்படுத்தல் 3:19

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த உயர் நீதிமன்ற பிரதம நீதிபதியானவர், துக்க முகத்தோடு இருப்பதை அவருடைய நெடுநாள் நண்பரானவர் அவதானித்துக் கொண்டார். அந்த நண்பரானவர், நீதிபதியை நோக்கி: நண்பனே, நீ துக்க முகத்தோடு இருக்கின்றதற்கு காணரம் என்ன என்று கேட்டார். அதற்கு நீதிபதியானவர்: இந்த தேசத்திலே நான் எந்தக் கல்வி நிலையங்களுக்குச் சென்று அறிவுரைகளை வழங்கும்போது, அங்குள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மிக வாஞ்சை யோடு காணப்படுவார்கள். பெரிதான கனத்தோடு, என் அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், என்னுடைய மகனானவனோ, என் சொல்லை கேளாமல், தன் விருப்பப்படி செயற்பட்டு வருகின்றான் என்றார். அதற்கு நண்பனானவன் நீதிபதியை நோக்கி: பிள்ளைகள் பிள்ளைகளைப் போல இருப்பார்கள், உன்னுடைய பிள்ளையானவன் நேர்வழியைவிட்டு அதிகதூரம் செல்லமாட்டான் என்றார். அதற்கு நீதிபதி: நான் பலமுறை ஆலோ சனைகளை கூறியிருக்கின்றேன், ஆனால் அவனோ அவைகளை அசட்டை பண்ணி வாழ்கின்றான். அப்பா, அன்புள்ளவர், எனவே அவருக்கு இருக்கும் செல்வாக்கினால் தன்னை எப்படியும் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றுவார் என்று அவன் நினைக்கின்றான். போகின்ற போக்கிலே அவன் சில சட்டவிரோதமான செயல்களுக்கும் உடந்தையாகிவிடுவானோ என்று எண்ணுகின்றேன். அதற்கு முன்பாக அவன் வழிகளை நான் சீர்படுத்த வேண்டிய சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது அவன் மனதிற்கு கசப்பாக இருக்கும் ஆனால் அவன் கால்களையோ, அது பொல்லாப்புக்கு விலக்கிக் காக்கும் என்று கூறினார். பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று சில தேவபிள்ளைகளும், அந்த நீதிபதியின் மகனானவனைப் போலவே இயேசுவின் அன்பைக் குறித்து தவறான எண்ணங் கொண்டு வாழ்கின்றார்கள். பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு நம்மை அழைத்த அன்புள்ள பிதாவாகிய தேவனானவர், பொல்லாப்புக்கு விலகும் ஆலோசனை களை நமக்கு அனதினமும் தம் வார்த்தை வழியாக கொடுக்கின்றார். அதைக் கேளாதவர்களை போல நாம் நடக்கும்; போது, நமக்கு எச்சரிப்பை வழங்குகின்றார். தேவ எச்சரிப்பை நாம் அசட்டை செய்து வாழும் போது, நல்ல தகப்பனைப் போல நம்மை கண்டித்து, தண்டித்து, உணர்வுள்ள இருதயம் நம்மில் மறுபடி யும் உண்டாகும் வழியை ஏற்படுத்துகின்றார்

ஜெபம்:

நடக்க வேண்டிய வழியை போதிக்கின்ற நல்ல தகப்பனே, நான் உம்முடைய ஆலோசனைகளின் வழிகளைவிட்டு விலகிப் போகாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 3:12

Category Tags: