புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 30, 2023)

வாடகை வீடு

எபிரெயர் 13:14

நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த முதலாளியானவன் திரண்ட ஆஸ்தியுள்ளவனாக இருந்தான். தனக்கு சொந்தமான அநேக வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தான். அவனுடைய வீடொன்றிலே, எளிமையான வாழ்க்கை வாழும் ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தது. ஒழுங்காக தங்கள் வாட கைகளை அவர்கள் செலுத்தி வந்தார்கள். பல மாதங்களுக்கு பின்னர், வாடகைக்கு இருந்த வீட்டுக்காரனுக்கு வேலையில்லாமற் போய்விட்டது. பல இடங்களுக்கு வேலை தேடி அலை ந்தான். ஒன்றும் பலனளிக்கவில்லை. வாடகை செலுத்தும் நாள் வந்ததும், வாடகையை சேகரிக்கும்படி அந்த முதலாளியாவனுடைய வேலைக்கார னொருவன் வந்தான். வாடகைக்கிருந்த வன், ஒரு சில நாட்கள் தவணை கேட் டுக் கொண்டான். அந்த வேலைக்காரனும் அதை முதலாளியிடம் தெரி வித்தான். முதலாளியானவன், வேறு சில கடுமையான ஊழியர் களை அனுப்பி, அந்த வீட்டில் வாடகைக்கிருந்தவனை பிடித்து அவன் குடும் பத்தோடு வெளியேற்றிவிட்டான். வெளியேற்றப்பட்ட அந்த மனிதனா னவன் மனவேதனையோடு பாதை வழியாக சென்று கொண்டிருந்தான். பிரியமானவர்களே, இரக்கமில்லாத அந்த முதலாளியானவன், தான் வாழும் இந்த பூமியும் ஒரு வாடகை வீடு என்பதையும், எல்லோருக்கும் பெரியவராக இருக்கும் எஜமானனாகிய கர்த்தரின் முன்னிலையிலே தானும் ஒருநாள் நிற்க வேண்டும் என்பதை உணராதவனாக, அந்த ஏழை குடும்பத்தினருக்கு அநீதி செய்தான். இந்த உலகத்திலே பல மனிதர்கள் நல்ல எண்ணத்தோடு ஐசுவரியத்தை தேடுகின்றார்கள். ஐசுவ ரியத்தை நாடித் தேடும் மனிதர்கள் தங்கள் இருதயத்தை ஐசுவரியத்தின் ஆசையினால் நிரப்பி விடுவதால், அவர்களுடைய இருதயத்திலே இரக்கத்திற்கு இடமில்லாமல் போய்விடுகின்றது. இறுமாப்பாய் வாழும் ஐசுவரியவான்கள் தங்களுக்கு பின் தங்கள் சந்ததிக்கு என்ன நடக்கும் என்பதை உணராது வாழ்கின்றார்கள். அது எப்படியென்றால், நல்ல எண்ணத்தோடு, ஒரு மலைப்பாம்பு குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருப்தைப் போன்றதாகும். அது வளர்ந்து ஒரு நாள் வீட்டிலிரு ப்பவர்களை விழுங்கிப் போடும். அதைப் போலவே ஐசுவரியமுள்ள மனிதர்கள் ஐசுவரியத்தின் ஆசை அவர்களை முற்றாக அவர்களை அடி மைப்படுத்திப் போடும். நீங்களோ இரக்கத்திலே செல்வந்தர்களாக வள ருங்கள். ஏழைகளுக்கு இரங்குங்கள். பரலோகத்திலே நிரந்தரமான பொகி ஷங்களை சேர்த்து வையுங்கள்.

ஜெபம்:

வானத்தையும் பூமியையும் படைத்த தேவனேஇ நாம் வாழும் இந்தப் பூமி நிலையற்றது என்பதை உணர்ந்தவர்களாகஇ நிலையான பரலோகத்திற்குரியவைகளை நாடித்தேடும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:20