புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 20, 2023)

வெற்றியின் இரகசியங்கள்

சங்கீதம் 119:72

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்


ஒரு கிராமமொன்றிலே வாழ்ந்து வந்த மனிதனொருவனுக்கு பெரிய பண்ணையொன்று இருந்தது. அவனுக்கு மூன்று குமாரர்கள் இருந்தா ர்கள். மூத்தவனும், இளையவனும் அவ்வப்போது தங்கள் தகப்பனானவனுக்கு உதவி வந்தபோதும், அவர்களுடைய இருதயமானது தகப்ப னானவருடைய பண்ணை விவகாரங்களோடு இருக்கவில்லை. எப்படி யாவது, இந்த ஊரைவிட்டு பட்டண த்திற்கு போய் அங்கே நாகரீகமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் இருந்தது. இரண்டாவது குமாரனோ, தன் தகப்பனானவருடைய பண்ணை விவகாரங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்ததுடன், தகப்பனானவருடைய பண்ணை பரிபாலனத்தின் வெற்றியின் இரகசியத்தை தான் அறிந்து கொள்ள வேண்டும் என்று, தன் தகப்பனானவரோடு அதிக நேரம் ஆர்வத்தோடு செலவிட்டு வந்தான். தகப்பனானவரும், அவனுக்கு வெற்றியின் இரகசியத்தை, அனுபவரீதியாக, படிப்படியாக கற்றுக் கொடுத்தார். நீ இவைகளை அறிந்து கொண்டால், பண்ணையை மட்டுமல்ல, எந்த வியாபாரத்தையும் நேர்த்தியாக செய்ய முடியும் என்று அவனுக்கு அவர் அறிவுரை கூறினார். தகப்பனானவர், மற்றய இரண்டு குமாரர்களையும் நேசித்தார். அவர்களுக்கும் சொத்தின் பாகத்தை பகிர்ந்து கொடுத்தார். ஆனால், அவர்களோ தகப்பனானவரோடு நேரம் செலவிடுவதைப் பார்க்கிலும், அவரிடமிருந்து தங்களுக்கு வரவேண்டிய ஆசீர்வாதத்தின் பங்கை எதிர்பார்த்திருந்தார்கள். அவனவன் எதை எதிர்பார்த்து வாஞ் சையோடு காத்திருந்தானோ, அதை அவனவன் பெற்றுக் கொண்டான். பிரியமானவர்களே, இன்று அந்த இரண்டாவது குமாரனைப் போல, பரம தந்தையாகிய தேவனாகிய கர்த்தரை தங்கள் வாழ்விலே மேன் மைப்படுத்துகின்றவர்கள் மிகவும் சொற்பமானவர்களாகவே இருக்கின்றார்கள். தேவனை தேடுவதும், தேவ ஊழியங்களிகளிலே நேரங்களை செலவிடுவதும், அநாகரீகமான காரியங்களாக இன்று தோன்றுகின்றது. எனவே, பலர் நாகரீகமான, நவீன உபதேசங்களை பின்பற்றி, உலகத் தின் கொள்கை கோட்பாடுகளிலும், தங்கள் பிரயாசங்களிலேயும் அதிக நம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள். ஆனால், சர்வத்தையும் படைத்த சர்வவல்லவருடைய அறிவை தள்ளிவிடுகின்றார்கள். அதனால், தங்க ளுக்கு தாங்களே கண்ணிகளை உருவாக்கிக் கொள்கின்றார்கள். நீங்களோ, நலமானதை பற்றிக் கொள்ளுங்கள். தேவனுடைய ஆலோசனையி ன்படி வாழ்ந்து நித்திய ஆசீர்வாதத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் என்று வாக்குரைத்த தேவனே, என்னுடைய மாம்சத்தின் எண்ணங்கள் என்னை மேற்கொள்ளாதபடிக்கு காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 8:12