புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2023)

இருதயத்தில் சந்தோஷம்

சங்கீதம் 19:8

கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது;


ஒரு உற்பத்தி நிலையத்திலே பொருத்தப்பட்டிருந்த பிரதானமான இயந்திரத்தை பரிபாலனம் செய்வதற்காக வந்த ஒரு தொழிநுட்ப வல்லுனர், அந்த இயந்திரத்தை பரிசோதித்து பார்த்த பின்பு, அந்த இயந்திரமானது எந்த இடையூறுமின்றி, நூற்றுக்கு நூறு திறனுடன் இயங்குவதாக அறி க்கையை சமர்பித்தார்.அந்த உற்பத்தி நிலையத்தின் அதிகாரி, அந்த இயந்திரத்தை ஆக்கியோனின் கைநூலிலுள்ள வழிமுறைகளின் படி நன்றாக பேணிப் பராமரித் ததால், அந்த இயந்திரம் இயங்க வேண்டிய பிரகாரமாக திறம்பட இயங்கி வந்தது. இந்த உலகத்திலே வாழும் நாம் ஒவ்வொரு வரும் பல் வேறு விடயங்களிலே வேறுபட்ட வர்களாக இருக்கின்றோம். எடுத் துக் காட்டாக, சிலர் சரீரத்திலே அதிக பெலனுள்ளவர்க ளாக இருக்கி ன்றார்கள். வேறு சிலர் பேச்சிலே சமார்த்தியமுள்ளவர்க ளாக இருக்கி ன்றார்கள். இப்படியாக பல வேற்றுமையகள் காணப்ப ட்டாலும், நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய கரத்தின் கிரியைகளாக இருக்கின்றோம். நம் ஒவ்வொருவருக்கும் தனித்துமான திட்டத்தை தேவன் வைத்திரு க்கின்றார். ஒவ்வொரு மனிதனானவனும்;, தன்னை உருவாக்கினவ ருடைய திட்டத்தை நிறைவேற்றும் போதே, அவன் இந்தப் பூமியிலே வாழ வேண்டிய பிரகாரமாக வாழ்கின்றான். பரிசுத்த வேதாகமமே நம்மை உருவாக்கினவருடைய கைநூலாக நமக்கு இருக்கின்றது. அந்த பரிசுத்த வேதாகமமானது மனிதனானவன் எப்படி எல்லா சூழ்நிலைக களிலும் மனமகிழ்ச்சியுள்ளவாக முடியும் என்பதின் இரகசியத்தை வெளிப்படுத்துகின்றது. கர்த்தருடைய நியாயமே சத்தியம். அவருடைய நியாயங்கள் நித்தியமானவைகள். அவருடைய நியாயங்கள் உத்தமமானவைகள். அந்த நியாயங்கள் மனிதன் செல்ல வேண்டிய வழியை போதிக்கின்றது. அதிலே நடக்கின்றவர்கள் நேரிய வழியை தெரிந்து கொள்கின்றார்கள். அவருடைய நியாயங்கள் உள்ளும் புறமும் மனிதன் எப்படியாக நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதை போதிக்கின்றது. அந்த நியாயங்களை தவறி நடக்கும் வேளைகளிளெல்லாம் இருதயத்திலே வேதனைகள் உண்டாகும். நம்மை உருவாக்கினவருடைய நியாயங்களிலே நாம் நம்மை பூரணமாக ஒப்புக் கொடுக்கும்போது இருதயத்திலே சந்தோஷம் உண்டாகின்றது. எனவே அவருடைய செம்மையாக நியாயங்களின் வழியிலே வாழ நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

என்னை உருவாக்கிய தேவனே, உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வாஞ்சையாக இருக்கும்படிக்கு அவைகளின் மேன்மையை நான் உணரும்படி எனது மனக்கண்களை பிரகாசிப்பீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:22