புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 03, 2023)

போகும் வழிதெரியவில்லை

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்.


ஒரு கப்பலானது சமுத்திரத்தின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கார்மேகங்கள் தீவிரமாய் சூழ்ந்து கொண்டது. சடுதியாக புயல்காற்று வீச ஆரம்பித்தபோது, கப்பலிலிருந்த பயணிகளையும், வேலையாட்களையும் பயமானது புகைக்காட்டைப்போல சூழ்ந்து கொண்டது. கொந்தளிக்கும் தண்ணீரிலே வழிதெரியாதிருந்த போது, கப்பலின் தளபதி, திசைகாட்டிக் கவிருயைப் பார்த்து, கப்பல் செல்ல வேண்டிய துறை முகத்தை நோக்கி, கப்பலை மெதுவாக ஓட்டிச் செல்லும்படி மாலுமிக்கு பணிப்புரை கொடுத்தான். கடும் புயல் காற்று மத்தியிலும், கப்பலானது தாபரிக்க வேண்டிய நகரத்தின் துறைமு கத்தை சென்றடைந்தது. நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளும், சமுத்திரத்தின் நடுவிலே கடும் புயல் காற்றில் அகப்பட்ட கப்பலைப் போல திடீரென்று மாறிவி டுகின்றது. கழுகுகள் பிணத்தை சுற்றி வட்டமிடுவதைப் போல, நம்முடைய வீழ்க்கையை எதிர்பார்த்திருந்த எதிரிகளும் சூழ்ந்து கொள்கின்றார்கள். அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்;. தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். நம்பியிருந்தோரும் உதவ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுப்போய் விடுகின்றார்கள். வழிதெரியாது தவிக்கும் வேளையிலே யார் தான் நமக்கு உதவமுடியயும் என்ற ஏக்கம் உள்ளத்தை கலங்கடித்து விடுகின்றது. அவ்வேளையிலே நம்முடைய ஆத்துமா நமது தேவ னையே நோக்கி அமர்ந்திருக்கும் போது, நம்முடைய வாழ்க்கையின் தளபதியாகிய ஆண்டவர் இயேசுவின் வார்த்தையானது திசைகாட்டியைப் போல நாம் செல்லும் வழிகளை காண்பிக்கின்றது. அதுமட்டும ல்லாமல், காரிருளில் உதிக்கும் தீபம் போல, அவருடைய வசனம் நம் பாதைக்கு வெளிச்சமாக மாறிவிடுகின்றது. பிரியமான சகோதர சகோதரிகளே, உங்கள் வாழ்க்கையை அழுத்தும் சூழ்நிலைகளைக் கண்டு நீங்கள் பயப்படும் நாளிலே, கர்த்தரை நம்பியிருங்கள். தேவ பக்தன் பாடியது போல, தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? என்று மனத்தாழ்மையோடும், விசுவாசத்தோடும் அறிக்கையிடுங்கள். நாம் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, அவர் நம்முடைய ஆத்துமாவை மரணத்துக்கும் நம் கால்களை இடறலுக்கும் தப்புவித்து நடத்த வது நிச்சயம்.

ஜெபம்:

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும் தேவனே, என் ஆத்துமாவை உம்மிடத்தில் உயர்த்துகின்றேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு காண்பித்து என்னை அதிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 143:8