புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 02, 2023)

வாழ்விலே நிறைவு வேண்டும்

சங்கீதம் 19:7

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்இ ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;


ஒரு குழந்தையானது பிறந்து பல பருவங்களை கடந்து செல்கின்றது. இன்றைய உலகிலே சிறுவர்கள் ஆரம்ப கல்வியைக் கற்கும்படி பாலர் பாடசாலைக்குச் செல்வது பெற்றோருடைய வாழ்க்கையிலே மிக முக்கியமான நாளாக இருக்கின்றது. அவர்கள் வளர்ந்து வாலிப பருவத்தை அடைகின்றார்கள். இப்படியாக, கல்வியை முடித்து, வேலை செய்கின்றார்கள். பின்பு வாழ்க்கைத் துணையை தேடி திரு மணம் செய்து கொண்டு, தங்களுக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக்;கொள்கின்றார்கள். இந் நிலையிலே அவர்களை வளர்த்த பாட்டானார், பாட்டி மற்றும் பெற்றோர் வயோதிப நிலையை அடைகின்றார்கள். இந்த வாழ்க்கை வட்டத்திலே, மகிழ்ச்சியான நாட்கள், துக்கமான நாட்கள், பெலனுள்ள நாடகள், பெலனற்ற நாட்கள், ஆரோக்கியமான நாட்கள், நோயுற்று வாழும் நாட்கள், குடும்பத்தைக் குறித்து திருப்தியான நாட்கள், ஏமாற்றமடையும் நாட்கள், மனவேதனையின் நாட்கள், சோதனைகளை கடந்து செல்லும் நாட்கள், மேன்மையடையும் நாட்கள், அவமானமடைந்து தாழ்த்தப்படும் நாட்கள் என்று எண்ணற்ற அனுபங்களை அவர்கள் கடந்து செல்கின்றார்கள். தங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, இது இப்படியாகும் என்று எனக்கு தெரிந்திருந்தால் அல்லது யாரும் கூறியிருந்தால், நான் மதியீனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டேன் என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எல்லாப் பருவங்களிலும் தேவன் அருளிய சத்திய வேதமானது நமக்கு நிறைவான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் தெளிவாக கூறுகின்றது. சகலத்தையும் படைத்த சர்வ வல்ல தேவனாகிய கர்த்தரின் வார்த்தையின்படி வாழ்ந்தால் அதனால் உண்டாகும் நன்மைகள் என்னவென்றும், தேவ வார்த்தைகளை தள்ளிவிட்டு, மனிதர்களின் எண்ணப்படி வாழ்ந்தால் அதனால் உண்டாகும் வேதனைகள் என்ன என்பதை, சத் திய வேதமானது துல்லியமாக வகையறுத்து கூறுகின்றது. ஆத்துமாவானது கலங்கி தியங்குகின்ற வேளையிலே, ஆத்துமாவானது மண்ணோடு ஒட்டிக்கொள்ளாதபடிக்கு, தேவன்தாமே தம்முடைய வார்த்தையை அனுப்பு ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்றார். சத்தியவேதம் நிறை வானது. நிறைவான வாழ்க்கையை வாஞ்சிப்பவர்கள் அதைப் பற்றிக் கொள்கின்றார்கள். நாமும் எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய வார்த் தையின் வழியில் வாழ நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

எக்காலத்திலும் அடைக்கலமாயிருக்கின்ற என் தேவனே, ஒரு நாளும் உம்மை மறந்து போகாமல், எல்லா பருவங்களிலும் நான் உம்மை நம்பி, உம்முடைய வார்த்தையின் வழியில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:24-25