புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 07, 2023)

எதற்காக அழைக்கப்பட்டீர்கள்?

பிலிப்பியர் 3:12

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனா னேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித் துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.


நீ இருக்கின்ற இந்த நிலையிலேயே இருக்க முடியாது. எங்களுடைய கம்பனியில் தொடர்ச்சியான தனிப்பட்ட, தொழில்நெறி சார்ந்த முன்னே ற்றத்திற்காக அநேக இலவசமான பாடத்திட்டங்களும், இலவச பயிற்சிக ளும் உண்டு. அவைகளை உன்னுடைய காலஅட்டவணையின்படி நீ செய்து முடிக்கலாம். உன்னுடைய சக ஊழியர்களும் உனக்கு உதவி செய்வார்கள். அது உன் எதிர்காலத்திற்கும் நல்லது என்று ஒரு கம்ப னியின் இயக்குனரொருவர் தன்னு டைய பிரிவில் வேலை செய்யும் ஒரு மனிதனுக்கு அறிவுரை கூறி னார். அவனோ, நான் இருக்கின்ற வண்ணமாகவே இருக்கப்போகின் றேன். எனக்கு எந்த மாற்றமும் தேவையில்லை என்று கூறிவிட் டான். மேற்கொண்டு, இயக்குனரால் அவனுக்கு உதவ முடியவில்லை. பல ஆண்டுகள் கடந்த பின்னர், தன் இளமைகாலத்திலே, அந்த இயக்கு னர் சொன்ன நல்ல அறிவுரையை கேளாமல் இருந்ததை குறித்து அவன் மிகவும் மனம்வருந்தி னான். ஆனால், காலம் கடந்து போயிற்று. பிரியமானவர்களே, அந்த மனித னைப் போலவே, அழைப்பை பெற்ற சில தேவ பிள்ளைகளும், ஆரம் பத்திலே நன்றாக ஓடி, பின்னர் ஒரு இடத்திலே இது போதும் என்று ஒதுங்கி விடுகின்றார்கள். தங்கள் வாழ்க்கையில் தற்போது ஏற்ப ட்டிரு க்கும் நிறைவினால் சிலர் நிர்விசாரம் அடைந்து விடுகின்றார்கள். சபை யிலே சங்கத்திலோ பொறுப்புக்களை எடுத்தால், உபத்திரவங்கள் உண் டாகிவிடும் அது நமக்கு தேவையில்லை என்று பொறுப்புக்களை தள்ளி விடுகின்றார்கள். ஆவிக்குரிய வாழ்க்கையிலே போராட்டங்கள் உண்டு. பாடுகள் உபத்திரவங்கள் உண்டு ஆனால் அதற்கு மேலாக தேவனு டைய வல்லமை நமக்கு உண்டு என்பதையும், பாடுகள் உபத்திரவங்கள் வழியாக தேவனானவர் நம்மை வனைந்து, கிறிஸ்துவின் சாயலிலே வளரப் பண்ணுகின்றார் என்பதையும் மறந்து போய்விடுகின்றார்கள். பிரிய மானவர்களே, கர்த்தர் நம்மை தமக்கு உகந்த பாத்திரமாக வனை யும்படிக்கு, உங்களை ஒப்புக் கொடுங்கள். கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்படுங்கள். நமக்கு முன்பாக இருக் கும் நித்திய பேரின்பத்தை நோக்கி பொறுமையோடு ஓடுங்கள்.

ஜெபம்:

என் நிலைமையை நன்றாக அறிந்த தேவனே, ஆதியிலே நான் கொண்ட விசுவாசத்தைவிட்டு விலகாமல், இன்னுமாய் உம்மில் வளர்ந்து பெருக நீர் எனக்கு உற்சாகம் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2