புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 06, 2023)

உகந்த பாத்திரம்

2 தீமோத்தேயு 2:21

எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.


ஒரு வீட்டின் சொந்தக்காரன், கடைக்கு சென்றபோது, ஒரு அழகான பெரிய ஜாடியைக் கண்டு விலை கொடுத்து வாங்கி வந்தான். அந்த ஜாடியை வீட்டின் மூலையிலே வைத்தான். பல மாதங்கள்சென்ற பின்பு, அந்த ஜாடியானது, நூதனசாலையிலே (ஆரளநரஅ) இருக்கும் தொல் பொருளுக்குரிய பொருளாக (யுவெi ஙரந) அது மனிதர்களுடைய பார் வைக்கு அழகாக இருக்கின்ற தேய ல்லாமல், தனக்கு எந்த பிர யோஜன முமற்றதாக வீட்டில் பெரிய இட த்தை பிடித்துக் கொண்டு இருக்கி ன்றதென்பதை அவன் உணர்ந்து கொண்டான். ஒரு வீட்டிலே பற்பல பாத்திரங்கள் உண்டு. அவற்றில் சில வீட்டின் சொந்தக்காரனுக்கு மிக வும் பிரயோஜனமுள்ளதாக இருக்கின்றது. வேறு சிலவோ, அங்கு இரு ந்தாலும் இல்லாவிட்டாலும், அவனுக்கு எந்த இலாபமோ நஷ;டமோ இருப்பதில்லை. ஆனால், பார்வைக்கு அவை அழகாக காட்சியளிக்கி ன் றது. அதுபோல, சிலருடைய ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கின்றது. நம் முடைய எஜமானனாகிய ஆண்டவர் இயேசுவுக்கு பிரயோஜனமுள்ள பாத்திரமாக நாம் இருப்பதற்கு, ஒருவன் சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிந்து சுவிஷேசத்தை அறிவிக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே தேவனுடைய பிள்ளைகளாக்கப்பட்டவர்களில், உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, ஏழை யோ, பணக்காரனோ, வாலிபனோ, வயது சென்றவனோ, சரீர பெலவீன முள்ளவனோ, சரீரத்திலே பெலனற்றவனோ, கல்விமானோ, கல்வி யறி வற்றவனோ, ஆணோ பெண்ணோ என்ற எந்த பாகுபாடும் இல்லை. முத லாவதாக, கிறிஸ்து இயேசுவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநி யாயத்தைவிட்டு விலகியிருக்க வேண்டும். 1. விசுவாசத்தின் கிரியை களை நடப்பிக்க ஆயத்தமுள்ளவனாகவும், அதாவது கர்த்தரின் சத்த த்திற்கு கீழ்ப்படிய தன்னை ஒப்புக் கொடுக்கின்றவனாகவும் 2. கர்த்தரு டைய வேளைக்காக காத்திருக்கின்றவனாகவும் இருக்க வேண்டும். அப் பொழுது அவன் எஜமானனாகிய ஆண்டவர் இயேசுவுக்கு உபயோ கமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்து க்குரிய பாத்திரமாயிருப்பான். எனவே, நாம் எந்த நிலையிலிருந்தாலும், பார்வைக்கு அழக்கான பாத்திரமாக மாத்திரமல்ல, கர்த்தருக்கு உகந்த பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாக இருக்கும்படிக்கு நம்மை தாழ்த்தி, அவருடைய வார்த்தையின்படி வாழ நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

என்னையும் நேசித்த தேவனே, இந்த உலகத்தின் பார்வையிலே நான் விலையேறப்பெற்ற பாத்திரமாக இருக்காமல், உமக்கு ஏற்ற மேலானவைகளை தேடுகின்ற பாத்திரமாக வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:14