புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 05, 2023)

பரலோக குடிமக்கள்

யோவான் 16:13

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத் துவார்;


மேற்கத்தைய நாடொன்றிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவன் தன் னுடைய 18வது வயதானது எப்போது வரும் என்று ஆவலோடு காத்தி ருந்தான். அந்த பிறந்த நாளோடு, தான் வாழும் நாட்டின் சட்டப்படி அவன் பூரண குடிமகனுக்குரிய உரிமைகளையும் (Rights) சலுகைக ளையும் (Privileges) அவன் வாஞ் சித்து காத்திருந்தான். முக்கியமாக அவன் தன் சராதி அனுமதிப் பத்திரத்தை பெற்று தான் மோட்டார் வண்டிகளை தனி யாக ஒடுவதற்கு ஆவலுள்ளவனாக இருந் தான். அதுமட்டுமல்ல, இதுவரை க்கும் பெற்றோர் பாதுகாவலர் சம்ம தத்தோடு செய்து வந்த பல காரி யங்களை அவன் தன்னுடைய இஷ; டப்படி செய்யவதற்கு சட்டப்படி அவன் உரிமையை பெற்றுக் கொள்வான். அவனுடைய தெரிவுகளும், தீர்மானங்களும் அவனுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பதாயிருக்கும். நம்முடைய வாழ்விலே, நாம் மீட்கப்பட்ட நாளுக்கென்று முத்திரையாக தேவனுடைய ஆவியை பெற்றிருக்கின் றோம். அந்த நாளிலே நாம் தேவனுடைய பிள்ளைகளென்ற பாக்கித்தை பெற்று, நம் தேவனை அப்பா பிதாவே என்று கூப்பிடும் சிலாக்கியத்தை அடைந்தோம். ஆவியானவர்தாமே நம்மோடு கூட இருந்து சகல சத்திய த்திலும் நம்மை வழி நடத்த அவர் எப்போதும் ஆயத்தமுள்ளவராக இருக் கின்றார். பதினெட்டு வயதையடையப் போகும் வாலிபனானவனுக்கு, பெற்றோர் நல்ல ஆலோசனைகள கொடுக்க ஆயத்தமாக இருப்பதை போல, ஆவியானவரும் வரப்போகிற காரியங்களை நமக்கு அறிவி ப்பார். பாவத்தைக்குறித்தும், நீதியைக்கு றித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து நமக்கு உணர்த்துவார். ஆனால், அவருடைய சத்தத்தை கேட்டு நடப்பதும், அவருடைய சத்தத்தை அசட்டைபண்ணி விட்டுவிடு வதும் நம்முடைய தீர்மானமாகவே இருக்கின்றது. சகலவிதமான கசப் பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர் க்குணம் போன்ற மாம்சத்தின் இச்சைகளை நாம் நம்மில் நிறைவேற்றும் போது அவரை நாம் துக்கப்படுத்துகின்றவர்களாக இருப்போம். தொடர் ச்சியாக அவருடைய சத்தத்தை நாம் அசட்டை செய்யும் போது, நம்மு டைய இருதயம் உணர்வற்றுப் போய்விடுவதால், துர்இச்சைகளை நிறை வேற்றுவது நம்முடைய சுபாவமாக மாறிவிடும். அதன் முடிவு நன்மைகு ரியதல்ல. எனவே, சத்திய ஆவியானவரின் உணர்த்துதலுக்கு இடங்கொடுங்கள். நன்மையை கண்டடையுங்கள்.

ஜெபம்:

பரிசுத்தத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, என்னுடைய உரிமை, சலுகைகளை நான் மாம்ச இச்சையின்படி நிறைவேற்றாமல், ஆவி யானவரின் சத்த்திற்கு கீழ்படிய உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 4:30-32