புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 17, 2023)

கர்த்தரையே நம்பியிருங்கள்

கொலோசெயர் 3:5

விக்கிரகாராதனையான பொருளாசை


மனிதர்கள் எவரை அல்லது எதை முதன்மையாக நம்பி வாழ்கின் றார்களோ, அந்த நபரை அல்லது முதன்மைப்படுத்தும் காரியத்தை தங் களுக்கு தேவனாகிக் கொள்கின்றார்கள். நீங்கள் உங்களைக் கெடுத்துக் கொண்டு, ஆண் உருவும், பெண் உருவம், பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவம், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவம், பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உரு வம், பூமியின்கீழ்த் தண்ணீரி லுள்ள யாதொரு மச்சத்தின் உருவமாயிரு க்கிற இவைகளில் யாதொரு உரு வத்திற்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும், உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த் தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற் படுத் தின வானத்தின் சர்வசேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்தி ரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதப டிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயி ருங்கள் இருங்கள் என்று தேவனாகிய கர்த்தர் கூறியிருக்கின்றார். தேவ தாச னாகிய மோசே, நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் தேவனு டைய வழிநடத்துதலின்படி பெற்றுக்கொள்ளும்படி, மலையில் ஏறி தேவ சமுகத்திற்கு சென்றான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில், அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; என்றான். ஜனங்களோ, அவன் வர தாமதமாகிவிட்டது என்று, தங்களை அழைத்துக் கொண்டு வந்த கர்த்தரின் கட்டளைகளுக்காக காத்திருக்கக்கூடாமல், கன்றுக்குட்டி களை வார்த்து, அவைகளை தங்கள் தெய்வம் என்று கூறி, அவைகளு க்கு ஆராதனை செய்தார்கள். இன்றைய நாட்களிலே மனிதர்கள் கர்த்த ரால் வரும் ஆசீர்வாதத்திற்கு பொறுத்திருக்கக்கூடாமல், தேவ ஆலோ சனைகளை அசட்டைபண்ணி, தேவ ஆலோசனைகளை கூறுபவர்களை அற்பமான எண்ணி, உலக போக்கிற்கு உட்பட்ட ஆலோசi னகளின் படி பொன்னையும் பொருளையும் அவைகளை உண்டுபண்ணக் கூடிய கல்வியையும், தொழிலையும் தங்கள் தெய்வமாக்கி, அவை களை அவர்களின் பிரதானமாக திட நம்பிக்கையாக மாற்றி விடுகின்றார்கள். உலகத்தினால் உண்டாகும் செழிப்பை தேவனுடைய ஆசீர்வாதம் என்று கூறிக் கொள்கின்றார்கள். நீங்களோ பொருளாசையை குறித்து எச்சரி க்கையாயிருங்கள். அதனால் உண்டாகும் வசதிகள் உங்கள் விசுவாச த்தை சேதப்படுத்தி, எல்லா கண்ணிகளையும் உண்டு பண்ணிவிடும்.

ஜெபம்:

பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் என்று சொன்ன தேவனேஇ நான் பூமியின் பொருளாசையை சாராமல்இ உம்முடைய வார்த்தையின் வழியிலே நான் வாழும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:9-10