புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 04, 2023)

சாட்சியுள்ள வாழ்க்கை

யோவான் 12:28

பிதாவே, உமது நாமத்தை மகி மைப்படுத்தும் என்றார்.


கம்பனியொன்றிலே சிறப்பான பதவி வகித்துவந்த விசுவாசியொருவன், தனக்கு கிடைத்த உத்தியோகத்தைக் குறித்து சபையிலே சாட்சி பகிர்ந்தான். ஆனாலும், தன்னை யார் என்பதை சிரேஷ்ட நிர்வாகிகளுக்கு காண்பிக்க தயக்கமுடையவனாக இருந்து வந்தான். தான் கிறிஸ்தவன் என்பதையம், ஆலயத்திலே ஊழியங்களிலே உதவி வரு வதை தனக்கொத்தவர்கள் அறிந்தால், தன்னை அற்பமாக எண்ணு வார்கள். வேலையாட்கள் மத் தியிலே அவமானமடைய வேண்டி வரும் என்று தனக்கு கிடைத்த நல்ல சந்தர்பங்களி லும், தன் விசுவாசத்தை வெளி ப்படுத்தாமல் இருந்து விட் டான். ஒருவன் உண்மையிலே கிறிஸ்துவினுடையவனாக இருந்தால், அவன் மேலானவைகளை தேடுகின்றவனாக இருப்பான். இந்த உல கிலே அவமானம் நிந்தை வந்தாலும், தனக்கென வைக்க ப்பட்டிருக்கும் நித்திய வாழ்வைக் குறித்த சந்தோஷம் அவனுக்குள் எப்போதும் இரு க்கும். தன்னை கிறிஸ்தவன் என்று வெளிப்படுத்தினால், இனி பதவி உயர்வுகள் கிடைப்பது அரிதாக இருக்கும். அநேகர் என்னோடு நட்பாக இருக்க விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுகின்றவன், சாட்சியற்ற வாழ் க்கையை வாழ்கின்றவனாக தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை போக்கடிக் கின்றான். நம்முடைய மீட்பராகிய இயேசு, தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கி றார். ஆனால் இன்று அழைப்பைப் பெற்ற சில தேவ பிள்ளைகளும் கூட, இந்தப் உலகத்தினால் உண்டாகும் அழிந்து போகும் மகிமையை மேன்மையாக கருதி, அதை அடையும்படிக்கு பிதாவின் நாமத்திற்கு உண்டாகும் மகிமையை தள்ளிவிடுகின்றார்கள். கிறிஸ்து இயேசுவுக்காக தாங்கள் கடுகளவும் அவமானம் அடைவதை விரும்புவதில்லை. நம்மு டைய ஆண்டவராகிய இயேசுவோ, சிலுவை மரணத்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்கும்படி எருசலேமிற்கு வந்த நாட்களிலே, ஜனங்கள் மத்தியிலே நின்று: இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட் சியும் என்று சொல்வேனோ. ஆகிலும், இதற்காகவே இந்த வேளை க்குள் வந்தேன். பிதாவே உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும் என்று தன்னை ஒப்புக் கொடுத்தார். நாமும் அதே சிந்தையை தரித்த வர்களாக நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, எனக்கு கிடைக்கும் அருமையான வேளையை நான் வீணாக்காமல், உம்முடைய நாமம் மகிமைப்படும்படிக்கு சாட்சி பகரும் வாழ்க்கை வாழ எனக்கு நீர் பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3