புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 27, 2023)

ஜெபத்தில் வளருவோம்

மத்தேயு 6:10

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.


சிறுபிள்ளையாக இருந்த நாட்களிலே, தந்தையிடம் பணம் இருப்பில் இருக்கின்றதோ இல்லையோ என்ற எண்ணமேதுமிருக்கவில்லை. அப் படி சிந்திப்பதற்கு அதைக் குறித்த அறிவும் எனக்கு இருந்தில்லை. நான் நினை த்ததெல்லாம் எனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். கண் கவர்ந்த விளையாட்டுப் பொருட்கள் அனைத்தையுமே வாங்கித் தரும்படி பிடிவாதமாக அழுத நாட்களு முண்டு. வாலிப நாட்களில், சிந்தித்து செய லாற்றும் அறிவிருந்த போதிலும், சக நண்பர்களைப் போல வாழ வேண் டும் என்று, பொறுப்புணர் சியின்றி, வர வில்லாமல் செலவுகள் செய்த ஆண் டுகளுமுண்டு. புத்தி தெளிந்த போதோ, தந்தையாருடைய கஷ;டங்களை உண ர்ந்து அவரோடு பங்காளியாக இணை ந்து குடும்பத்தின் நலனுக்காக செய்ய ப்பட வேண்டிய தேவைகளுக்காக பிரயாசப்பட ஆரம்பி த்தேன். இப் போது புத்தியீனமாக, குழந்தைத்தனமாக நடந்து கொண்ட நாட்களை நினைத்து வெட்படுகின்றேன் என்று ஒரு மனிதனானவன் கூறிக் கொண் டான். கர்த்தருடைய பாடுகளை அதிகமாக தியானிக்கின்ற இந்த நாட் களிலே, நாமும் நம்முடைய ஜெப வாழ்க்கையிலே நம்மு டைய கர்த் தரைப் போல மாற வேண்டும். 'நான், எனக்கு, என்னுடை யது' என்று சுயநலனுக்காக நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்று ஜெபம் செய்யாமல், பிதாவாகிய தேவனுடைய சித்தமானது இந்தப் பூமியிலே நிறைவேறும்படிக்கு, நாம் நம்மை அவருடைய பரிபூரண திட்டத்திலே பங்காளிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். பூமியும் அதன் நிறைவும் அதன் குடிகளும் கர்த்தருடையது. அவருடைய திட்டமானது அவரு டைய நலனைக் குறித்ததல்ல. அவர் சர்வ வல்லமையுள்ளவ ராகவே இருக்கின்றார். அவருடைய அநாதி தீர்மானம் நம்முடைய நலனைக் குறி த்ததாக இருக்கின்றது. நாம் இந்த உலகத்தின் மாயைக்குள் மறுபடியும் சிக்கிவிடாதபடிக்கு, பரலோத்திற்கு சென்றடைய வேண்டும் என்பதே நம்மைக் குறித்த அவருடைய அநாதி தீர்மானமாக இருக்கி ன்றது. அந்த திட்டம் நிறைவேறும்படிக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அதுவே நம்முடைய அனுதின ஜெபமாக மாறவேண்டும். தேவ ராஜ்யம் வருவதாக. தேவ சித்தம் பரம ண்டலத்திலே செய்ய ப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று நாம் நம்மை அவரிடத்தில் ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, குழந்தைத்தனமான வாழ்க்கை வாழாமல், உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவைப் போல, உம்முடைய திருச் சித்தத்தில் பங்காளியாக வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 4:34