புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 27, 2022)

மனநிறைவோடு நன்றி செலுத்துங்கள்

எபிரெயர் 13:5

உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணு ங்கள்


ஒரு தொண்டர் ஸ்தாபனமானது, வறுமைக் கோட்டின் கீழே வாழும் மக் கள் நிறைந்த கிராமமொன்றிலே நிவாரண உதவிகளை வழங்குவ தற் கான ஆயத்தங்களை செய்து வந்தது. முன்குறிக்கப்பட்ட நாளிலே, மக் கள் வரிசை வரிசையாக வந்து நிவாரணமாக கொடுக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை பெற்றுச் சென்றார்கள். சில குடும்பத்தினருக்கு ஒன் றுக்கு மேற்ப்பட்ட பொதிகளை கொடு க்கப்படுவதை கண்டு கொண்ட சிலர், காரணம் என்ன என்று அறியாமல், எப் படி அவர்களுக்கு அதிகமும் நமக்கு கொஞ்சமும் கொடுக்கின்றீர்கள் என்று குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். வேறு சிலர் எரிச்சலடைந்தார்கள். ஆனால், அங்கு வந்து தன்னுடைய சிறிய பங்கை பெற்றுக் கொண்ட ஏழைக் குடியானவன், கண்களில் கண்ணீர் நிறைந்தவனாய், பொதி களை வழங்கும் தொண்டர்கள் அண்டை சென்று அவர்கள் கால்களிலே விழுந்து, ஐயா, தயாள குணமிக்கவர்களே, நானும் என் குடும்பமும்; ஒரு கிழமைக்கு வயிறாற உண்ணும்படிக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த உணவுப் பொதிக்காக மிக்க நன்றி. தேவன் உங்களை ஆசீர்வ திப்பாராக என்று மன நிறைவோடு தன் நன்றியை தெரிவித்துக் கொண் டான். அந்த ஏழைக் குடியானவன், மற்றவர்களிடம் எவ்வளவு அதிகமாக இருக்கின் றது என்றும், தன்னிடம் எவ்வளவு குறைவாக இருக்கின்றதும் என்றும் பாராமல், தன்னுடைய தற்போதைய தேவை சந்திக்கப்பட்டிரு ப்பதைக் குறித்து மனத் தாழ்மையோடும் உள்ளம் கனிந்த நன்றியை அந்த தொண்டர்களுக்கு தெரிவித்தான். பிரியமான சகோதர சகோதரி களே, நாம் ஒருபோதும் அந்தக் கிராமத்திலிருந்த, மற்றயவர்களுடைய நன்மை களை குறித்து எரிச்சலடையும் கலகக்காரரைப் போல இருக்கக் கூடாது. தேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் ஈவுகளுக்காக அவருக்கு மனநிறைவோடு நன்றியைத் தெரிவிக்க வேண்டும். நம்மு டைய படியை நமக்கு அளந்து கொடுக்கின்ற கர்த்தர் நம்மோடிக்கி ன்றார். அவரே நம்முடைய மேய்ப்பராக இருக்கின்றார். நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாக இருக்கின்றோம். ஆதலால், நாம் தாழ்ச்சி அடைவதில்லை. கைவிடாத கன்மலையாகிய கர்த்தர் நம்முடைய தாபர மாக இருக்கி ன்றார். எனவே, மற்றவர்களை நோக்கிப் பார்க்காமல், நமக்கு நன்மை செய்த தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பார்த்து, அவர் இந்த ஆண் டிலே நமக்கு செய்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரங்களை ஏறெடு ப்போம். இதுவரை நடத்திய தேவன் நம்மை தொடர்ந்தும் நடத்திச் செல்வார்.

ஜெபம்:

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடு வதுமில்லை என்று வாக்குரைத்த தேவனே, நீர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காவும் என் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவிக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 23:1-2