புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 20, 2022)

மறைந்திருக்கும் அடிமைத்தனங்கள்

லூக்கா 18:27

மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்


பல ஆண்டுகளாக நான் மதுபான வெறியின் அடிமைத்தனத்திற்குள் கட் டப்பட்டு என்னையும், என் குடும்பத்தையும், எனது உழைப்பையும் கெடு த்துக் கொண்டிருந்தேன். விடுதலையடையும்படி அவ்வப்போது சில மனித முயற்சிகளை எடுத்தும் அவைகள் ஒன்றும் எனக்கு உதவா மற் போயிற்று. என்னுடை குடும்பத்தின ரும், உறவினர்களில் சிலரும் என்னு டைய விடுதலைக்காக மிகவும் ஊக் கமாக ஜெபித்து வந்தார்கள். ஒருநாள் ஆண்டவராகிய இயேசு என்னை சந் தித்தார். அந்த நாளிலே, நான் மது பானத்தை எவ்வளவு விரும்பியிருந்தேனோ, அவ்வளவிற்கு அதை அதிகதிமாக வெறுக்கும்படியாக எனக்காக பாடுகள்பட்ட இயேசு கிருபை செய்தார் என்று ஒரு மனிதனானவன் தன்னுடைய அனுபவ சாட்சியை பகர்ந்து கொண்ட அந்த நாளை நினைத்துப் பார்த்தான். யாவரும் காணக்கூடிய வெளியரங்கமான அந்த அடிமைத்தனத்திலிலுந்து விடுதலை யாக்கப்பட்ட தான், இன்று யாரும் காணமுடியாத அடிமைத்தனமாகிய பொறாமை, எரிச்சல் போன்றவற்றினால் கட்டப்பட்டிருக்கின்றேன் என்று தன் நிலைமையை உணர்ந்து, அதற்காக மனவருதப்பட்டான். என்னை மீட்டுக்கொண்ட இயேசு, நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கின்றவராக இருக்கின்றார். என் சிந்தையை கெடுத்துக் கொண்டிருக்கும் இந்த அடி மைத்தனத்திற்கும் விடுதலை தருவார் என்று அவன் அறிக்கை செய் தான். எந்தக ஒரு காரியத்தைக் குறித்தோ அல்லது எந்த நபரைக்கு றித்தோ எரிச்சல் மனதில் எரிச்சல் உண்டாகும் போது, அவர்களை இயே சுவின் நாமத்தில் ஆசீர்வதிக்க ஆரம்பித்தான். அனுதினமும் ஜெபம் செய்யும் போது, எவர்களைக் குறித்த வெறுப்பு மனதில் உண்டாகின் றதோ, அவர்களுக்காக முதலாவதாக ஜெபித்து வந்தான். நாளாடை வில், தன் மனதிலிருந்துவந்த அந்த மாம்சத்தின் அடிமைத்தனம் அவ னைவிட்டு நீங்கியதை உணர்ந்து மிகவும் மகிழ்ச்சி கொண்டான். தன் மனதிலே, ஆவியின் கனியாகிய சமாதானம் உண்டாயிருப்பதை அறி ந்து கொண்டான். ஆம் பிரியமானவர்களே, காலங்கள் கடந்து சென் றாலும், அநேக வருட அனுபவங்கள் இருந்தாலும், உங்கள் மனதிலே மாம்ச இச்சையின் அடிமைத்தனங்கள் மறைந்திருக்கின்றதா என உங் களையே நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். விடுதலையடைய வேண்டும் என்ற வாஞ்சையுடையவர்களாக, தேவனு டைய பாதத்திலே உங்களை ஒப்புக் கொடுங்கள். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இன்றும் அவர் விடுத லையை தர வல்லவராக இருக்கின்றார்.

ஜெபம்:

என் நிலைமையை நன்றாக அறிந்த தேவனேஇ மறைவான அடிமைத்தனத்திற்கு நான் என்னை ஒப்புக் கொடுக்காமல்இ உம்முடைய திவ்விய சுபாவங்களிலே வளரும்படிக்காய் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:8

Category Tags: