புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 04, 2022)

ஈடு இணையில்லாத மகிமை

ரோமர் 8:18

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.


ஒரு மனிதனானவன், பல நெருக்கங்கள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் மத்தியிலும் உத்தமமாக வாழவேண்டும் என்று தன் இருதயத்திலே தீர்மானம் செய்து, அவன் தன் வாழ்க்கையிலே நஷ்டம் வந்தாலும் நீதியின் பாதையிலே நடந்து வந்தான். சில வருடங்கள் சென்ற பின்பு, அவன் தான் வாழும் தெருவின் அப்புறத்திலே, அநியாயத்திலும், துன்மார்க்கத்திலும் தங்கள் வாழ்க்கையை உல்லாசமாககளிக்கும் மனிதர்களை கண்டு மிகவும் எரிச்சல் அடைந்தான். தனக்கு வரவிருக்கும் ஈடு இணையில்லாத மகிமையின்மேல் வாஞ்சையாக இரு க்க வேண்டிய அந்த மனிதனான வனின் இருதயத்திலே, தற்போது துன்மார்க்கனுக்கு வரவிருக்கும் அழிவை காண வேண்டும் என்ற ஆசை பெருகத் தொடங்கியது. நீதிமானாகிய அந்த மனிதனானவ னின் போக்கை கவனித்த போதகரானவர், அவனை அழைத்து: மகனே, துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். (நீதி 14:32) இது உண்மை யுள்ள வார்த்தைகள். ஆனால், துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தில் அழி ந்து போவதிலே நம்முடைய பிதாவாகிய தேவன் பிரியப்படுகின்றவர் அல்லர். அவர்களும் மனந்திரும்ப வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருக்கின்றது. (எசேக்கியல் 33:11). துன்மார்க்கன் தன் துன்மார் க்கத்தைவிட்டு விலகாதிருந்தால், அவன் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவான். அப்படியான ஆத்துமாக்களின் அழிவை காண ஆசையாயிருப்பது, நீதிமானுக்கு நியாயமாகுமோ என்று அறி வுரை கூறினார். பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக நீதிமான்களாக்கப்பட்டவர்களே, துன்மார்க்கனின் வாழ்க்கையை கண்ணோக்கிப் பார்த்து அவனுடைய அழிவுக்காக காத்திருப்பது நமக்குரியதல்ல. மாறாக, இருளடைந்திருக்கும் அவர்களுடைய மனக் கண்கள் உணர்வடையும்படிகு வேண்டுதல் செய்யுங்கள். உங்கள் கஷ;டங்களைக் குறித்து துக்கித்து சோர்வடையாமல், உங்க ளுக்காக வைக்க ப்பட்டிருக்கிற ஈடு இணையில்லாத மகிமையை குறி த்து சந்தோஷப்படுங்கள். உங்கள் கண்கள் தேவன் நமக்கு முன் வைத்த இலக்கின்மேல் எப்போதும் இருப்பதாக. நாம் காணாததை நம்பியிரு க் கின்றபடியால், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, பொல்லாதவர்களை குறித்த எரிச்சல் என் இருதயத்திலே குடிகொள்ளாதபடிக்கு, எனக்கு முன் வைத்திருக்கும் பெரிதான மகிமையின் நிமித்தம் சந்தோஷமாக இருக்க உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:2