புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 11, 2022)

நான் யாருக்கு ஊழியம் செய்கின்றேன்?

நீதிமொழிகள் 16:28

மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல் லுகிறவன் பிராண சிநேகிதரை யும் பிரித்துவிடுகிறான்.


தேவ தூதர்கள், தேவனாகிய கர்த்தருடைய தூதை கொண்டு வருவ தால் அவர்களை தேவ தூதர்கள் என்று அழைக்கின்றோம். சமாதானத் தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனு க்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ் வளவு அழகாயிருக்கின்றன என்ற பிரகாரமாக, கிறிஸ்துவின் நற்செய் தியை அறிவிக்கும் மனிதர்கள்: உபத்திரவம், வியாகுலம், துன் பம், பசி, நிர்வாணம், நாச மோசம், பட்டயம் போன்றவற் றையும் பொருட்படுத்தாது, பெற்ற பணியை செய்து முடிப் பதால் அவர்களை தேவனுடைய ஊழியர்கள் என்று அழை க்கின்றோம். அப்படியானால், மனிதர்களை தூற்றிக்கொண்டு, கோள் சொல்லி, புறங்கூறி திரிகின்றவ ர்கள் யாருக்கு உழியம் செய்கின்றார்கள்? இவர்கள் சமாதானத்தை அறிவிப்பதில்லை எனவே இவர்கள் தேவனுடைய புத்திரர்கள் அல்ல. இவர்களுடைய பாதங்கள் போகுமிடமொன்றிலும், நற்செய்தியை சுவி சேஷமாக அறிவிப்பதில்லை. இவர்களின் ஐக்கியத்தில் தேவன் ராஜரீகம் பண்ணுகிறதுமில்லை. இவர்கள் ஒருமித்து துதிக்கும் துதி கேட்பதில்லை. அப்படியானால் இவர்கள் யாருடையவர்கள்? பிரியமானவர்களே, தூற்றிதிரிகின்றவர்களும், கோள்கூறுகின்ற வர்களும் துன்மார்க்க மான வழியை தங்களுக்கு தெரிந்து கொண்டு ஒழுக்கக்கேடாக பேசித்தி ரிகிறார்கள். இவர்கள் தங்கள் கண்களால் சைகை காட்டி, தங்கள் கால்களால் அடையாளங்களையிட்டு, தங்கள் விரல்களால் போதனைசெய் கின்றார்கள். இவர்கள் இருதயத்திலே திரியாவரமுண்டு. இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறார்கள். இவர்கள் கிறிஸ்துவோடு சேர்க்காமல் சிதறடிக்கின்றவர்கள். எனவே நாம் இப்படிப்பட்ட அந்தகாரத்தின் தூதுகளை கொண்டு செல்லும் கிரி யைகளுக்கு சற்றேனும் உடன்படாமல், தேவனுடைய பிள்ளைகளாக இருக்கவேண்டும். நாவை அடக்குவது மனிதனுடைய பெல த்திற்கு அப் பாற்பட்டது. ஆனால், நம்மோடிருக்கும் ஆவியானவர்தாமே எல்லாவற் றையும் செய்து முடிக்க நமக்கு வேண்டிய ஞானத்தையும் பெலத்தை யும் கொடுத்து, நம்மை வழிநடத்திச் செல்ல ஆயத்தமுள்ள வராக இருக்கின்றார். எனவே தேவ ஊழியத்தை நிறைவேற்றுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, என் நாவைப் பொல்லாப்புக்கும், என் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொ ள்ளும்ப டிக்கு, தூய ஆவியின் துணை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:26