புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 26, 2022)

மலையின்மேல் இருக்கிற பட்டணம்

மத்தேயு 5:14

மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது


நான் குறிப்பிட்ட அந்த ஊரிலே நன்மை பகர்க்கும் சிறிய திட்டமொ ன்றை செய்யும்படி பணம் அனுப்பியிருந்தேன், ஆனால் நடைபெற்ற காரியங்களிலே எனக்கு பூரண திருப்தியில்லை. நான் நம்பியிருந்தவர் என்னை ஏமாற்றிவிட்டார் எனவே நான் இப்போது எதையுமே செய்யப் போவதில்லை என்று ஒரு மனிதனாவன் தன் போதகரிடம் கூறிக் கொண்டான். காரியம் அப்படியாக இரு க்கின்றதா என்று கூறிக்கொண்ட போத கர், சகோதரனே, நீ எப்படியாக இரட் சிக்கப்பட்டாய் என்பதன் சாட்சியை கொஞ்சம் கூறுவாயா என்று கேட்டார். அதற்கு அந்த மனிதனாவன்: நான் கைநி றைய உழைத்தேன், கண்போன போக் கிலே வாழ்ந்தேன். எத்தனையோ ஆண்டுகளை வீணாக்கியிருந்தேன். ஆனால் தேவ கிருபையினாலே நான் அழிந்து போகாமல் மீட்கப்பட் டேன் என்று சுருக்கமாக கூறினான். ஆம், சகோதரனே, சற்று உன் வாழ் க்கையையே நீ சிந்தித்துப் பார். எத்தனை ஆண்டுங்கள்? எத்தனை தலாந்துகள்? எவ்வளவோ பணம் இவையெல்லாவற்றையும் நீ சரியான முறையிலே செலவு செய்தாயா? நீ மீட்பை பெற்றுக் கொண்டபின்பும், உனக்கு கொடுக்ப்பட்டிருக்கின்ற நேரத்தையும், உன் பொருட்களையும் தேவ நீதியின்படி செலவு செய்கின்றாயா? அதுபோலவே, இந்த உல கிலே தவறுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆதலால், நாம் நம்முடைய நற்கிரியைகளை நிறுத்திவிட முடிமோ? தேவன் இன்னும் நமக்கு கிருபையை பொழிகின்றாரே. எனவே, கடந்த காலத்திலே நடந்த சம்பவங்களினாலே, உன் நற்கிரியைகளை நிறுத்திவிடாதே. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்ட ணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன் பாகப் பிரகாசிக்கக்கடவது என்று ஆண்டவர் இயேசு கூறியிக்கின்றார் என்று அறிவுரை கூறினார். ஆம், பிரியமானவர்களே, நற்கிரியைகளை நடப்பிப்பதற்கு நல் வழிகளை உண்டாக்கும் தேவன் நம்மோடு இருக்கி ன்றார். நாம் தேவ நீதியை நிறைவேற்றும்படிக்கு, வேதத்தை தியானி த்து, ஜெபம் செய்ய வேண்டும் அப்போது தேவ ஆவியானவர்தாமே பாதைகளை திறந்து, நற்கிரியைகளை செய்யும் எண்ணத்தையும், திராணியையும், ஞானத்தையும் தந்து வழிநடத்துவார். எல்லார்மேலும் கிருபையை பொழியும் தேவனேஇ உம்முடைய பிள்ளையாகிய நானும்இ உம்மைப்போல இரகத்திலே செல்வந்தனாக நாளுக்கு நாள் வளர்ச்சியடையும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த உலகத்தின் ஆளுகைக்குள் நான் சிக்கிவிடாதபடிக்கு எப்போதும் உம்முடைய ஆளுகைக்குள் இருந்து உம்முடைய ஆலோசனையின்படி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:10