புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 23, 2022)

விலைமதிக்க முடியாத ஈவுகள்

எபேசியர் 2:8

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;


பிலிப்பு என்னும் உதவி ஊழியர் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்தி ற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கி த்தார். அந்தப் பட்டணத்திலே அநேகர் அசுத்த ஆவியின் கட்டுகளிலி ருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலை பெற்றார்கள். அந்தப் பட்டண த்திலே பெரிதான இரட்சிப்பு உண்டாயிற்று. அதே பட்டணத்திலே சீமோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் மாயவித்தைக்காரனாயிரு ந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியாநாட்டு ஜனங்க ளைப் தனது பிரியைகளினாலே பிர மிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான். அவனோ இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண் டான். அப்பொழுது, அப்போஸ்தல ர்களாகிய பேதுருவும், யோவானும் அவ்விடத்திற்கு வந்து, ஞானஸ் நானம் பெற்றவர்கள், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் களுக்காக ஜெபம் பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர் கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப்போஸ் தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிற தைச் மாயவித்தைக்காரனாயிருந்த சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக் கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக் கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாச மாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக் குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். பிரியமானவர்களே, தேவனால் அருளப்படும் பாவ மன்னிப்பு, மீட்பு, சுகம், விடுதலை, அபிஷேகம் யாவும் விலைமதிக்கமுடியாதவைகள் ஆனால் தயவுள்ள தேவன்தாமே அவைகளை நமக்கு இலவசமாக கொடுக்கின்றார். எனவே, தேவ காரியங்களுக்கு விலையை போடுகி ன்றவர்க ளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். நீங்களும் உங்கள் விசுவாசத்தை விற்கப்பட்டு போய்விடாதபடி காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

கிருபயினாலே என்னை மீட்டுக் கொண்டவரே, பரலோகத்திலிருந்து நீர் கொடுத்தவைகளின் மேன்மையை உணர்ந்து, உமக்கு நன்றியுள்ளவனாக வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:10