புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2022)

நிலையான சுதந்திரத்தில் பங்கடையுங்கள்

மத்தேயு 25:34

உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.


இந்த தேசத்திலே எனக்கு நிலையான சொத்துக்கள் (Fixed Assets) இவ்வளவு இருக்கின்றது. என்னுடைய நாளாந்த செயற்பாடுகளை கவனிப்ப தற்காக, நடப்பு சொத்தாக (Current Assets) வங்கியிலே இவ்வளவு பணம் இருக்கின்றது என்று ஒரு மனிதனானவன் தன் சுதந்திரத்தைக் குறித்து மிகவும் பெருமை பாராட்டிக் கொண் டான். ஒருவன் தன்னிடத்தில் எப்படிப் பட்ட நிலையான சொத்துக்களை இந்த பூமியிலே வைத்திருந்தாலும், அது ஒரு நாள் இந்த பூமியோடே அழிந்து போகும். அழியாத, நிலையான ராஜ் யமாகிய பரலோகத்திலே சுதந்திரத் தை நாம் அடையும்படிக்கு, ஆண்ட வர் இயேசு வழியாக அழைப்பை பெற்றிருக்கின்றோம். இந்த உலகத் திலே, ஒரு மனிதனானவனுடைய ஆசை பொருட்களை பற்றியிருக்கும் போது, அவன் இந்த உலகிலே எவ்வளவு பெரியவனாக கருதப்பட்டா லும், அவன் இருதயம் பொருளாசையை பற்றியிருப்பதால், அவன் தன் சொத்துக்களுக்கு அடிமையாக வாழ்கின்றான். நாமோ, தேவனாகிய கர்த்தரை, அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகார த்தின் ஆவியைப் பெற்றிருப்பதால், நாம் தேவனுடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, அவருடைய ராஜ்யத்தின் பிள் ளைகளாகிய நாம், தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுத ந்தரருமாயிருக்கின்றோம். இந்த அழியாத பரலோக சுதந்திரத்திலே நாம் எப்படியாக எங்கள் பொக்கிஷங்களை பெருகப் பண்ணமுடியும்? மிகவும் சிறியவர்களும், இந்த உலகத்தினாலே அற்பமாக எண்ணப்படுகின்ற, கிறிஸ்துவின் சகோதரரானவர்களுக்கு நீங்கள் எதைச் செய்கின்றீர் களோ, அதை நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கென்று செய் கின்றவர்களாக இருக்கின்றீர்கள். அதாவது, கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம், சிறியவர்களும் அற்பமானவர்களுமாக பசியாய் இருப்பவர் களுக்கு ஆகாரம் கொடுங்கள். தாகமாய் இருப்பவர்களின் தாகத்தை தீருங்கள். அந்நியரைப்போல தள்ளுண்டிருக்கின்றவர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரம் கொடுங்கள். வியாதியாய் இருக்கின்றர்களை விசாரியுங்கள். காவலிலிருப்பவர்களை சந்தியுங்கள். இவற்றை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படி செய்யுங்கள். நிலையான சுதந்திரத்தில் பங்கடையுங்கள்.

ஜெபம்:

என் தேவை என்ன என்று அறிந்த தேவனே, இந்த உலகத்தின் ஆசைக்குள் நான் சிக்கி, நான் பெற்ற உன்னத அழைப்பை மறந்துவிடாதபடிக்கு, உணர்வுள்ள ஜீவியம் ஜீவிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:14-17

Category Tags: