புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 16, 2022)

அழியாத முதலீடுகள்

பிலிப்பியர் 3:20

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது


ஒரு தேசத்திலுள்ள தொழிநுட்பப் கம்பனியொன்று வளர்ந்து வருவதை கண்ட, மனிதனொருவன், தன்னிடமிருந்த இரண்டு வீடுகளின் ஒன்றை விற்று, அதனால் வந்த ஆதயம் முழுவதையும், அந்தக் கம்பனியின் பங்குகளிலே (Shares) முதலீடு செய் தான். அந்த கம்பனியின் வியாபாரமானது, தேசம் முழுவதும் விஸ் தாரமனதனால், பங்குகளின் விலை துரிதமான வளர்ச்சி கண்டது. அந்த மனிதனாவன் கொள்வனவு செய்த ஆயிரக்கணக்கான பங்குகளின் பெறுமதி, குறுகிய காலகட்டத்திற்குள், பன்மடங்காக வளர்ந்து பெரு கிற்று. அவன் முதலீடு செய்த தொகையைப் பார்க்கிலும் அதன் தற் போதைய பெறுமதி பத்து மடங்காக அதிகரித்திருந்தது. அதனால், அந்த மனிதனாவன், தேசத்திலே ஒரு கோடீஸ்வரனானான். தன்னுடைய முதலீட்டைக் குறித்த தீர்மானங்களைக் குறித்து அவன் பெரு மகிழ் ச்சியடைந்தான். இப்போது ஒரு வீடல்ல, பல மாட்டிக் கட்டிடங்களுக்கு உரிமையாளரானான். ஆண்டுகள் கடந்து சென்றதும், ஒரு நாள் இரவு நேரம், அந்த தேசத்திலே பெரிதான பூமியதிர்சியுண்டானது. சில நிமிட ங்களுக்குள், அந்த தேசமானது பேரழிக்கு உள்ளானதால், அவன் முதலீடு செய்திருந்த, அந்த தொழிநுட்பக் கம்பனியும், அவன் வாங்கியிருந்து பல மாடிக் கட்டிடங்களும், அவன் தன் முதலீடுகளை காப்பு றுதி செய்திருந்த ஸ்தாபனமும், முற்றாக அழிந்து போனதினால், அவன் தலைசாய்க்க இடமில்லாமல், தெருவிலே வசிக்க வேண்டியதாயிற்று. பிரியமானவர்களே, என்னிடமும், உங்களிடமும் இருக்கும் இந்தப் பூமிக் குரிய எல்லாப் பொருட்களின் முடிவும், இவ்வண்ணமாக இருக்கும். (2 பேதுரு 3:7, லூக்கா 21:33). ஆனால், என் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். பிரியமானவர்களே, நம்முடைய நிரந்திர குடியிருப்பு இங்கில்லை, வரப்போகும் பரலோகத்தை நாம் நாடுகின்றோம். எனவே, உங்களுடைய முதலீடுகள் யாவையும் அழியாத ராஜ்யத்தின்கென்று செய் யுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் ஒரு கலசம் தண்ணீர் குடிக்க கொடுத்தவனும் அதன் பலனை அடையாமல் போக மாட் டான். எனவே, அந்த மகிமையான ராஜ்யத்தை நோக்கி முன்னேறுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனேஇ பின்னானவைகளை மறந்து, முன்னான வைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:14