புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 15, 2022)

அழியாத பொக்கிஷம்

மத்தேயு 6:20

பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்;


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஐசுவரியவானொருவன், தன் வயோதிப நாட்கள் சீக்கரமாக கடந்து செல்வதால், தனக்குண்டான ஆஸ்திகளை இரண்டு பங்காக பிரித்து, தன்னுடைய இரண்டு குமாரர்களுக்கு ஒவ் வொரு பங்காக கொடுத்தான். மூத்தவன், தன் பங்கின் பெரும்பகுதி யை, அந்த ஊரிலுள்ள பெரும் பண்ணையொன்றை வாங்குவதற்காக முத லீடு செய்தான். இளையவன், தன க்கு கிடைத்த பங்கை, வளர்ந்து வரும் புற தேசமொன்றிலே, மாடிக் கட்டிடங்களை வாங்கி, வாடகை க்கு விடுவதிலே முதலீடு செய்திரு ந்தான். இரவும் பகலும், மூத்தவ னுடைய எண்ணமும் ஏக்கமும், அந் தப் பண்ணையை பற்றியிருந்தது. அதுபோலவே, இளையவனின் எண் ணமும் ஏக்கமும், அந்த புற தேசத்தின் விவகாரங்களை குறித்ததாகவே இருந்தது. கருப்பொருளாவது, அவர்களுடைய முதலீடு எங்கே இருந்த தோ, அங்கே அவர்களுடைய இருதயமும் இருந்தது. பிரியமானவர் களே, இந்தக் கதையை மையமாக வைத்து, நம்முடைய முதலீடு எங்கே இருக்கின்றது என்று நாம் இன்று தியானம் செய்வோம். இந்தப் பூமிக்குரிய வைகளை நாடித் தேடுகின்றவர்களின் முதலீடு இந்த பூமியி லி ருப்பதால் அவர்கள் இரவும் பகலும் பூமிக்குரியவைகளையே சிந்திக்கின்றார்கள். ஒருவேளை அவர்கள் ஆலயத்திற்கு சென்றாலும், இந்தப் பூமியிலே தாங்கள் கையெடுத்து செய்கின்ற காரியங்களை தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். இவர்களு டைய ஆத்துமாவும் இந்த பூமியோடு ஒட்டியிருக்கின்றது. பூமியும் அதிலுள்ளவைகளும் அழிந்து போவதால் இவர்களுடைய முதலீடும், மண்ணோடு ஒட்டியிருக்கும் இவ ர்கள் ஆத்துமாவும் அழிந்து போகும். ஆனால் விண்ணிலே தங்கள் முதலீடுகளை வைத்திருக்கின்றவர்கள், இரவும் பகலும் அதைக் குறித்த வாஞ்சையுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தியானமும் ஜெபமும் பரலோகத்திலுள்ள மேன்மையானவைக ளையே நாடித் தேடும். இவர்களின் ஆத்துமா, அழியாமையை வாஞ்சிப் பதனால், இவர்கள் விண்ணவர்களுக்குரிய சாயலிலே நாளுக்கு நாள் வளர்ந்து பெருகுவார்கள். ஆதலால், கிறிஸ்து தேவனுடைய வலதுபா ரிசத்தில் வீற்றிருக்கும் இட த்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். மேன் மையானதை பற்றிக் கொள் ளும்படி, பிரகாசமுள்ள மனக்கண்களை தேவன் உங்களுக்கு கொடுக்கு ம்படி வேண்டிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அழியாமையை தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பேன் என்று கூறிய தேவனேஇ, நான் சோர்ந்துபோகாமல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நற்கிரியைகளைச் செய்ய என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:6-7