புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 25, 2022)

நிறைவான சந்தோஷம்

1 யோவான் 1:7

அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்;


இந்த உலக வாழ்க்கையில், பாடுகள் மத்தியிலே எப்படி தேவ பிள்ளைகளோடு ஐக்கியமாக இருப்பது? எப்படி நிறைவான சந்தோஷத்தோடு பணியை செய்வது? கிறிஸ்துவின் நற்செய்தி பணிக்காக முன்னோடிகளாக தங்கள் வாழ்க்கை அர்ப்பணித்திருந்த அவருடைய சீஷர்கள், பல பாடுகள், உபத்திரவங்கள், கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், நிந்தைகள், அவமானங்கள் யாவும் சகித்து, மனநிறைவோடு தங்களுக்கு ஒப் புவிக் கப்பட்ட திருப்பணியை நிறைவேற்றினார்கள். இவை யாவற்றின் மத்தியிலும், சீஷர்கள் மத்தியிலே உண்டான ஐக்கியம் நிறைவாக இருந்தது. கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கையில் அவர்களுக்குள், நிறைவான சந்தோ ஷம் இருந்தது. அவர்களில் ஒருவராகிய யோவான் என்பவர் தங்கள் வாழ்க்கையில் வெற்றி யைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கின்றார். நம்முடைய வாழ்விலும், வீட்டிலும், சபையிலும், வேலையிலும், பாடசாலையிலும், வெளியிட ங்களிலும் பல பாடுகள், உபத்திரவங்கள், கஷ்டங்கள், நஷ்ட ங்கள், துன்பங்கள், நிந்தைகள், அவமானங்கள் உண்டாகலாம். அவைகள் மத்தியிலும் நிறைவான சந்தோஷத்தோடு நாம் தேவ சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு, இந்த உலகத்திற்கு ஒளியாக வந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய சொந்த இரட்சகர் என்று விசுவசித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அவராலே உண்டாகும் இரட்சிப்பின் வழியாக, இருளின் அந்தகாரக் கிரியைகளிலி ருந்து விடுதலையாக்கப்பட்டு, பரலோகத்தோடு ஒப்புரவாக்கப்பட வேண்டும். இந்த ஒப்புரவாக்குதலினாலே நாம் பிதாவாகிய தேவனோடும், அவரு டைய திருக்குமாரனாகிய இயேசுவோடும் ஐக்கியமுள்ளவர்களாக்கப்படுகின்றோம். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. எனவே நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், அந்தகாரத்தின் கிரியைகளுக்கு உடன்படுகின்றவர்களாக இருந்தால், தேவ வார்த்தை யின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந் தால், முதலாவதாக நாம் தேவனோடு ஐக்கிமானவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படும். அப்படி தேவனோடு உண்மையாகவே ஐக்கியமாக இருப்பவர்கள் யாவரும் ஒருவரோடொருவர் ஐக்கிய மாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையிலே உபத்திரவங்கள் இருந்தாலும், அவர்கள் உள் ளத்தில் தேவன் கொடுத்திருக்கும் நிறைவான சந்தோஷம் இருக்கும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே. என்னுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி, நான் உம்முடைய திவ்விய ஒளிக்குரிய கிரியைகளை என் வாழ்வில் நடப்பிக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:6