புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 30, 2022)

தேவ நீதி நிறைவேறும்

சங்கீதம் 76:9

வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது.


யாக்கோபு என்ற மனிதனுடைய நாட்களிலே, சகல தேசங்களிலும் கொடிதான பஞ்சம் ஏற்பட்டிருந்தது. அதனால் அவனும், அவனுடைய குடும்ப த்தார் யாவரும் வாழ்வாதாரத்திற்காக எகிப்துக்கு சென்றார்கள். மொத்தமாக அவனுடைய சந்ததியார் 70 பேராக இருந்தார்கள். யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்ற பெயரை தேவனாகிய கர்த்தர் கொடுத்திருந்தார். எழுபது பேராக இருந்த இஸ்ரவேல் சந்ததியார் ஏராளமாய்ப் பலுகிப் பெருகிப் பலத்திருந்தார்கள்;. எகிப்து தேசம் அவர்களால் நிறைந்தது. இதைக் கண்ட எகிப்தின் அதிகாரிகள், அவர்களை தங்களுக்கு அடிமைகளாக்கி, சுமைசுமக் கிற வேலைகளினால் ஒடுக்கி, கொடுமையாய் வேலை வாங்கினார்கள். இன்று உங்கள் சந்ததிக்கு இப்படியாக நடந்தால், ஆண்டவரே இந்தக் கொடுமையை பாரும் என்று கூறுவீர்கள் அல்லவா? அதுமட்டுமல்லாமல், இஸ்ரவேலருக்கு ஆண் பிள்ளைகள் பிறக்கும் போது அதை கொன்று போடும்படிக்கும், பெண்பிள்ளைகளை உயிரோடே வைக்கும்படிக்கும், மருத்துவிச்சிகளுக்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்; கூறியிருந்தான். அந்தக் காரியம் முழுமையாக நடைபெறாமல் போனதினால், பிறக்கும் ஆண்பி ள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளை யெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான். இதை கொடுமை என்றும் ஆண்டவர் நீதி செய்ய வேண் டும் என்று நீங்கள் சொல்வீர்கள் அல்லவா? இவைகள் எல்லாம், தேவனாகிய கர்த்தருக்கு மறைபொருளாக இருக்கவில்லை. எகிப்தியரின் அக்கி ரமமோ பெரிதாகிக் கொண்டே சென்றது. இஸ்ரவேல் புத் திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டி னது. தேவன் முன்குறித்து வந்த ஆண்டுகள் முடிவுக்கு வந்தது. கர்த்தருடைய ஓங்கும் புயமும், பலத்த கரமும் எகிப்தின்மேல் நீட்டப்ப ட்டது. ஆனால், எகிப்தியரோ, மனந்திரும்ப மனதில்லாதவர்களாய், தங்கள் இருதயத்தை இன்னும் அதிகமாக கனடிப்படுத்தினார்கள். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள்மேல் உண்டாயிற்று. பிரியமானவர்களே, தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஜனங்கள் மேலும் ராஜ்யங்கள் மேலும் நிறைவேறும். அது மனிதனுடைய எண்ண ப்படியல்ல, தேவனுடைய நீதியின்படி அது நிறைவேறும்.

ஜெபம்:

சகலத்தையும் அறிந்த தேவனே, மனிதனுடைய நீதியின்படியல்ல, நீர் உம்முடைய நேரத்திலே தேவநீதியை நிறைவேற்றுகின்றவர் என்பதை அறிந்து கொள்ளும் இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 33:22