புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 03, 2022)

தேவனுடைய ஆளுகை

சங்கீதம் 37:31

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.


தேவனுடைய ஆளுகை இருக்கும் இடத்திலே, தேவனுடைய சித்தம் நிறைவேற்றும் வெற்றி வாழ்க்கை உண்டு. தேவ சித்தம் நிறைவேறும் இடத்திலே அனுதினமும் தனித்திருந்து, தேவனோடு உறவாடும் ஜெபம் இருக்கும். இந்த வாழ்க்கையானது நீதிமானுடைய வாழ்க்கை. நீதிமான் களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ் செய்யும். தேவனுடைய ஆளுகை இல்லாத இடத் திலே மனிதர்கள் தங்கள் சொந்த இஷ்டப்படி தமது வாழ்க்கையை நடத்து வார்கள். இவர்கள் உலகத்தை ஜெயம் கொள்ளுவதில்லை, மாறாக, உலகம் இவர்களை ஜெயம் கொண்டிருக்கும். அந்த வாழ்க்கையிலே தனித்திருந்து தேவனோடு உறவாடும் ஜெபத்திற்கு இடமில்லை. இப்படிப்பட்டவர்களுடைய கூடாரங்களிலே ஒயாத முறுமு றுப்யே இருக்கும். இன்றைய தியானத்திலே, நாம் நம்மை ஆராய்ந்து பார்க்கும்படிக்கு, நாம் ஒவ்வொருவரும் நம்மிடத்திலே பின்வரும் கேள் விகளை கேட்டுக் கொள்வோம். 'தேவன் என்னுடைய வாழ்க்கையில் ஆளுகை செய்கின்றாரா? தேவ சித்தம் நிறைவேற்ற வேண்டும் என்ற வாஞ்சை என் உள்ளத்தில் உண்டா? நான் அனுதினமும் தேவனுடைய சமுகத்திலே தனித்திருந்து ஜெபிக்கின்றேனா? தேவனுடைய இரட்சிப்பி னால் உண்டான ஆனந்த தொனி என் உள்ளத்தில் உண்டா?' தேவன் ஆளுகை செய்யும் நீதிமானுடைய வாழ்க்கையானது உபத்திரவமில் லாத, துன்பங்கள் இல்லாத வாழ்க்கை என்பது பொருள் அல்ல. நீதிமான் துன்பத்தின் மத்தியில் நடந்தாலும், தேவ நீதி நிறைவேறும்படி, தன் வழிகளை தேவனுக்கு ஒப்புவித்து, தேவனுக்காக காத்திருக்கின்றான். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங் 34:19). அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. (சங் 37:31). மேலும் நம் முடைய ஆண்டவராகிய இயேசு கூறுகையில்: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலக த்தை ஜெயித்தேன் என்றார் (யோவான் 16:33). பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையானது தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றதா? நீங்கள் தேவனுடைய ஆளுகைக்கு உட்படாதிருந்தால் உங்கள் வாழ்க்கையை ஆளுகை செய்வது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் இல்லாத வாழ்க்கை தண்ணீரற்ற பாலைவனம் போன்றது. ஒவ்வொரு நாளும் உம்மோடு வாழ்கின்ற வெற்றி வாழ்க்கையை நான் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:15