புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 05, 2022)

உலகத்தில் அனுப்பப்பட்டவர்கள்

யோவான் 17:16

ஆண்டவர் இயேசு: நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.


ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் நிறைவேறும் வேளை வந்த போது, இந்த உலகத்தைக் குறித்தும், தம்மைப் பின்பற்றுகின்றவர்கள் இந்த உலகிலே எப்படி வாழ வேண்டும் என்பதையும் குறித்து தம்முடைய சீஷர்களுக்கு பல காரியங்களை கூறினார். இன்றைய நாளிலே மீட்பராகிய இயேசு கூறிய வசனங்களை தியானம் செய்வோம். 'உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங் கள் உலகத்தாராயிருந்தால், உல கம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராத படியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது என்றார். ஆனாலும் 'சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; என்றும் 'உலகம் அந்தச் சத்திய ஆவியானவ ரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்' என்றும் என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றும் தம்முடைய சீஷர்களை பெலப்படுத்தினார். மேலும் அவர் 'அவர் தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன். நான் உலகத்தான ல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல. ஆதலால் உலகம் அவர்க ளைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள் ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் என்று வேண்டிக் கொண்டார்.' ஆம் பிரியமானவர்களே, நாம் இந்த உலகத்திலே வாழ்ந்தாலும், இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அல்லவே. ஆனாலும், சகல ஜாதிகளும் ஆண்டவராகிய இயேசுவை அறியும்ப டிக்கு அவருடைய மீட்பின் நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்து, அவருடைய சாட்சிகளாக நாம் இந்த உலகத்திலே வாழும்படியாக அழைப்பைப் பெற்றிருக்கின்றோம்.

ஜெபம்:

இந்த உலகத்திலிருந்து எங்களை வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்திலே நமக்கு உபத்திரவங்கள் ஏற்பட்டாலும் தளர்ந்து போகாமல் நீர் தந்த பணியை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 28:19-20

Category Tags: