புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 03, 2021)

நீதிமானுக்கு வரும் துன்பங்கள்

சங்கீதம் 34:19

நீதிமானுக்கு வரும் துன்பங் கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.


காரியாலயமொன்றிலே சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ஊழியரொருவன் தன் வேலைகள் யாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்து வந்தான். அவனுடைய இயக்குணர், வேலையைவிட்டு விலகிப்போனதினால், புதிதாக ஒரு இயக்குணர் நியமிக்கப்ப்டார். ஒருநாள், புதிதாக நியமிக்கப்பட்ட அந்த இயக்குணர், சட்ட விதிமுறை களுக்கு விரோதமான சில நடவடி க்கைகளின்படி சில வேலைகளை செய்யும்படிக்கு அந்த ஊழியனுக்கு பணிப்புரை வழங்கினார். இப் பொ ழுது இந்த ஊழியனின் மனதிலே பெரும் போராட்டம் உண்டாயிற்று. இந்தப் போராட்டமானது அவனு டைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அவனால் தவிர்த்துக் கொள்ள முடியாது. அந்த ஊழியனானவன், இந்தப் போரட்டத்திற்கு அவன் முகங்கொடுத்து அதை அவன் மேற்கொள்ள வேண்டும். அவன் தேவ பயமுடையவனாக இருந்ததால், தன் வேலைக்கு நஷ;டம் வந்தாலும் பரவாயில்லை என் தன் மனிதிலே தீர்மானம் செய்து கொண்டு, தன் இயக்குணரை நோக்கி: ஐயா, என்னுடைய தேவனானவர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்ட சட்ட விரோதமான நடவ டிக்கைகளின்படி நான் முன்னொருபோதும் வேலை பார்த்ததுமில்லை இனி அப்படியாக பார்க்கப்போவதுமில்லை என்று பணிவாக கூறிக் கொண்டான். நம்மை நோக்கி வரும் போரட்டங்களில் சில நம்முடடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதாவது, நாம் செய்த குற்றத்தினால் அவை உண்டாகுவதில்லை. அவைகளை தேவ வசனத்தின்படி நாம் ஜெயங் கொள்ள முயற்சி செய்யும் போது, இந்த உலகதிலே சில நஷ; டங்கள் உண்டாகலாம். அதாவது, சில வேளைகளிலே, தேவ நீதியை நிறைவேற்ற நாம் நம்மை ஒப்புக் கொடுக்கும் போது, நம்மு டைய வாழ்விலே, பொருளாதார நஷ;டம் ஏற்படலாம் அல்லது சில உறவுகள் பழைய நண்பர்களை இழக்க நேரிடாலாம் ஆனால் இந்த நஷ;டங்கள் யாவும் இந்த உலகத்தோடு முடிந்து போய்விடும். தீமைசெய்கிறவர்க ளுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப் போகப்பண்ண, கர்த்தரு டைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது. நீதிமான்கள் கூப் பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உப த்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். எனவே தேவ நீதியின் நிமி த்தம் துன்பங்களை சகித்தால், நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின் வழியிலே வாழும்போது நஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவைகளை தாங்கிக் கொண்டு, உம்மிலே நம்பிக்கையாக இருக்க உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:11

Category Tags: