புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 07, 2021)

களிகூருங்கள்...

மத்தேயு 5:12

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;


பல சவால்கள் மத்தியிலும்; கண்ணீரோடு பிரயாசப்படுகின்றவர்கள், தங்கள் விடாமுயற்சியின் பலனை அறுப்பதை நாம் இந்த உலகிலே காண்கின்றோம். கண்ணீரோடு விதை விதைக்கும் விவசாயி, அறுவ டையின் நாளிலே தன் பலனை கெம்பீரத்தோடு அறுக்கின்றான் என் பதை குறித்து நாம் கடந்த மாதத்திலும் தியானம் செய்தோம். எடுத்துக் காட்டாக, படிக்கக்கூடிய சூழ்நிலைகள் இல்லாத நிலையில் பல நெருக்கங்கள் மத்தியிலும் தன் பாட ங்களை சிரத்தையாக படிக்கும் மாணவர்கள் தன் முயற்சியின் பலாபல னை பெற்றுக் கொள்கின்றார்கள். நாம் காணும் இப்படிப்பட்ட விதை ப்பும் அறுப்பும் நம் குறுகிய வாழ்க்கை வட்டத்திலே பூமிக்குரிய பலன் களாக இருக்கின்றது. ஆதலால் இந்த உலகிலே காணப்படுகின்றவைகளால் உண்டாகும் பலன்களும் குறுகிய வாழ்க்கைவட்டத்திற்குரியதாகவே இருக்கின்றது. நம்முடைய இலக்கு காணப்படுகிறவைகளையல்ல. நம் மாம்ச கண்களால் காணப்படாத பரம தேசத்தை நாம் நோக்கியிருக்கின்றோம். அந்த பரம தேசத்தின் மேன் மையை பலனாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நிச்சியித்த பரிசுத்தவான்கள், பல துன்பங்கள் இன்னல்கள் மத்தியிலே கண்ணீரோடும், நீடிய பொறுமையோடும், விடாமுயற்சியோடும் தங்கள் வாழ்க்கையையே விதைத்தார்கள். கிறிஸ் துவினிமித்தம் வரும் பாடுகளை அதிக மேன்மை என்று எண்ணி, அவைகளை முறுமுறுப்பில் லாமல் ஏற்றுக் கொண்டார்கள். என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல் வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியா யிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, இந்த உலகத்திலே உண்டாகும் விதைப் பிலும் அறுப்பிலும் நம்முடைய கண்களை பதிய வைக்காமல், இனி வரவி ருக்கும் மேன்மையான பரலோக மகிமையை நோக்கி முன்னேறுவோம். அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவத்தைக் குறி த்து மனம் நொந்து கொள்ளாமல், அவைகளால் நமக்கு மிகவும் அதிக மான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த வர்களாக வாழக்கடவோம்.

ஜெபம்:

காணப்படாதவைகளாகிய நித்திய கனமகிமைக்கு அழைத்த தேவனே, பரலோகத்தின் மேன்மையை அறுவடை செய்வதையே என் இலககாக கொண்டு வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:17

Category Tags: