புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 28, 2021)

எங்கள் ஆசை எதைப் பற்றியிருக்கின்றது?

பிலிப்பியர் 3:12

கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.


இன்று இரவு என்னுடைய நண்பர்களுடன் நான் இரவு விருந்து சாலைக்கு செல்லவேண்டும் என்று மகனானவன் தன் பெற்றோரிடம் கூறிக் கொண்டான். அதற்கு அவன் பெற்றோர்: மகனே, அது நீ செல்ல வேண்டிய இடமல்ல, நீ அங்கே போகாதே என்று கேட்டுக் கொண் டார்கள். மகனானவனோ: நாட்டின் சட்டப்படி எனக்கு உரிமை உண்டு. அப்படியானால் ஏன் அப்படியான சட்ட த்தை நாட்டிலே ஏற்படுத்தியிருக்கின் றார்கள். நான் எப்படியாவது அங்கு செல்லுவேன் என்று கூறி, பெற்றோ ரோடு எதிர்வாதம் பேசி, தான் நினைத் தபடியே இரவு விருந்து சாலைக்கு சென்றுவிட்டான். இந்த வாலிபனுடைய மனதைப் பற்றியிருக்கும் ஆசை என்ன? எதனால் இந்த வாலிபன் ஜெயிக்கப் பட்டிருக்கின்றான்? தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தையரின் மனதை வேதனைப் படுத்துவது அவனுக்கு அற்பமான காரியமாக இருந்தது. அந்த வாலிபனுக்கு பெற்றோர் இருந்தது போல, நமக்கு ஒரு பிதா பரலோகத்திலே இருக்கின்றார். இந்த உலகத்திலுள்ள நன்மை செய்யும் பெற்றோரைவிட அவர் நம்மை அதிகமாக நேசிக்கின்றார். நம்மை பர லோகத்திற்கு வரும்படியாக அழைப்பை கொடுத்திருக்கின்றார். ஆனால், அழைப்பை பெற்றவர்களின் நிலைமை எப்படியாக இருக்கின்றது? அந்த வாலிபன் கூறியதைப் போல, சிலர், நான் என் வேலையை தக்க வைப்பதற்காக அல்லது வியாபாரத்திற்காக எதையும் செய்வேன் என்று கூறுகின்றார்கள். வேறு சிலர், அவரைத் திருமணம் செய்யவதற்காக அல்லது அவளைத் திருமணம் செய்வதற்காக நான் எதையும் செய் வேன் என்று சபதம் கூறுகின்றார்கள். இன்னும் சிலர், உல்லாசப் பய ணம் செய்வதற்கு நான் எப்போதும் ஆயத்தம் என்று சொல்லிக் கொள் வார்கள்.இவர்களுடைய வாழ்க்கையிலே வௌ;வேறான ஆசைகள் பற் றியிருக்கின்ற போதிலும், அவைகளில் பொதுவான நோக்கமாகனது ஒன் றாகவே இருக்கின்றது. அதாவது, தங்கள் ஆசையை நிறைவேற்றும்ப டிக்கு இவர்கள் எதையும் செய்து கொள்ள ஆயத்தமுள்ளவர்களாக இரு க்கின்றார்கள். பரம அழைப்பும், தேவ சித்தத்தை செய்வதும், தேவனை ஆராதிப்பதும் இவர்கள் வாழ்க்கையிலே இரண்டாவது இடத்திற்கு சென் றுவிடுகின்றது. உங்கள் இருதயத்திலே முதலிடத்தை பெற்றிருக்கும் ஆசை என்ன? கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம பந்தயப் பொருளை பற்றியதாகவே இருப்பதாக.

ஜெபம்:

பரலோக தேவனேஇ அழிந்து போகின்ற இந்த உலக சுகபோக ங்களிலே என் ஆசையை வைக்காமல் அழியாமையை பற்றிக் கொள் வதே என்னுடைய ஆசையாக இருக்கும்படி என்னை உணர்வுள்ளவ னா(ளா)க்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3