புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 25, 2021)

நோக்கமும் நம்பிக்கையும்

சங்கீதம் 71:5

கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.


“வங்கிக் கணக்கிலே பணம் உண்டு அதினாலே நாளையைக் குறித்த கவலை எனக்கில்லை. தேசத்தின் இராணுவ பலம் அதிகம், அதனால் பாதுகாப்பைக் குறித்த பயம் எனக்கில்லை. என்னுடைய பிள்ளைகள் தலைதூக்கிவிட்டார்கள் இனி என்னை அசைக்க முடியாது. கையிலே காசு இல்லை என்றால் வங்கியிலே கடன் அட்டடைகளை எடுக்கலாம் அல்லது என்னுடைய நண்பனிடத்தி லே கடன் வாங்கலாம். இந்த வேலை சரியில்லையென்றால் இன்னு மொரு வேலையை பார்க்கலாம்.” இந்த அறிக்கைகளிலே என்ன தவறு உண்டு? சற்றுத் சிந்தித்துப் பாரு ங்கள். இப்படியாக இன்று மனித ர்கள் தங்கள் பொருளிலும், உறவி லும், உலக போக்குகளிலும் தங்கள் இருதயத்தை பதிய வைக்கின் றார்கள். இப்படிபடிட்டவர்களின் வாழ்விலே குறைவு இல்லை என்று சிலர் தங்களை அழைத்த தேவனை மறந்து விசுவாச மார்க்கத்தைவிட்டு விலகி, உணர்வற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள். ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு இடமி ல்லையே. நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்க ளையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வரு~ங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிரு க்கிறது. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல் லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத் துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ள ப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். பிரியமானவர்களே, ஒருவேளை நம்மிடம் உலக வசதிகள் இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். நாம் சமுக அந்தஸ்துள்ளவர்களாகவோ அல்லது ஒடுக்கப்பட்டவர்களாகவோ இருக்கலாம். எந்த நிலையிலிரு ந்தாலும், பரமபிதாவே நம்மை பிழைப்பூட்டுகின்றார். அவரே நமக்கு அனுக்கிரகம் செய்கின்றவர். அவரே நம் உறைவிடம், பாதுகாப்பு என் பதை ஒருபோதும் மறந்து போய்விடாதிருங்கள். ஒரு கணப்பொழு திலே இந்த உலக காரியங்களெல்லாம் மாறிப் போய்விடும் ஆனால் மாறாத தேவனே எங்கள் நோக்கமும் நம்பிக்கையுமாயிருக்கின்றார்.

ஜெபம்:

என் நிலையை நன்றாக அறிந்த பரலோக பிதாவே, இந்த உலக போக்கின்படி வாழ்ந்து விசுவாச மார்க்கத்தைவிட்டு விலகிப் போய்விடாதபடிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:2

Category Tags: