புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 11, 2021)

இழந்து போனவைகள்

மத்தேயு 16:27

அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.


ஐயா பெரியவரே, ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக தேவனை சேவித்து அவருக்காக பணி செய்து வருகின்றேன். எத்தனையோ உபத்திரவங் கள், அவமானங்கள், துன்பங்கள் போன்றவற்றை சந்தித்து வருகின் றேன். கிறிஸ்துவை சேவிப்பதினால் பல காரியங்களை இந்த உலகத் திலே இழந்து போனேன். இன்னும் எதையெல்லாம் நான் இழந்து போக வேண்டும்? என்று ஒரு மனிதனாவன் வயதான ஒரு ஊழியரைக் கேட் டுக் கொண்டான். அதற்கு அவர் மறுமொழியாக மகனே, இந்த உல கத்திலே எவையெல்லாம் அழிந்து போய்விடுமோ, அவையெல்லாவற் றையும் இழந்துபோக நீ ஆயத்த மாக இரு. நான் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லும் நாட்கள் நெரு ங்கிக் கொண்டிருக்கின்றது. அந்நாளிலே என் உயிர் இந்த சரீரத்தை விட்டு கடந்து போகும், இந்த சரீரமும் மண்ணோடு மண்ணாக அழிந்து போகும். அக்கரையிலே நான் அழியாத நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வேன். இந்த பூமியிலே நாம் கிறிஸ்துவுக்காக இழந்துபோன யா வற்றிற்குமுரிய பலனை ஆண்டவர் இயேசு நமக்குத் தருவார். எனவே சோர்ந்து போகாதே. உன்னிடத்திலிருக்கின்ற உல கத்திற்குரியவை களை நீ காத்துக் கொள்ளவிரும்பினால், நீ நித்திய ஜீவனை இழந்து போவாய் எனவே அழியாத நித்திய ஜீவனை விட்டு விடாமல் பற்றிக் கொள், மிகுதியானவைகள் யாவும் ஒழிந்து போகும் என்றார். ஆம் பிரி யமான சகோதர சகோதரிகளே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் நாம் நாளாந்தம் பல சவால்களையும், நெருக்கங்களையும், துன்பங்க ளையும் சந்திக்கின்றோம். சில வேளைகளிலே மனிதர்கள் காரணமின்றி நம்மை பகைக்கின்றார்கள். நன்மையை பெற்றவர்கள், நன்மைக்கு பதி லாக தீமையை செய்கின்றார்கள். பலவிதமான எதிர்ப்பு, ஏளனம், அவ மானம் நிந்தையை சகிக்க நேரிடுகின்றது. இதனால் பலர் பாதி வழி யிலே சோர்ந்து போய்விடுகின்றார்கள். தன் ஜீவனை இரட்சிக்க விரும் புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனு~ன் உலகம் முழுவ தையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை ந~;டப்படுத்தி னால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்ன த்தைக் கொடுப்பான்? மனு~குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் அவர் பலனளிப்பார்.

ஜெபம்:

அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்க பலனளிக்கும் தேவனே, சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து அழியாமையை தேடும்படிக்கு எனக்கு உற்சாகத்தின் ஆவியைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:36-39