புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2021)

நீங்கள் யாரைச் சார்ந்தவர்கள்?

யோவான் 14:3

ஆண்டவர் இயேசு: நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஜனங்கள், தங்களுக்கென்று ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்கள். ஆனால் ராஜா யார் என்பதைக் குறித்த தீர்மானத்திலே அந்த ஊரார் இரண்டாக பிரிந்து விட்டார்கள். ஒரு சாரார், நீதியையும் நியாயத்தையும் குறித்த உணர்வுள்ள ஒருவனையும், இன்னுமொரு சாரார் நீதியைக் குறி த்த எந்த சிந்தனையுமேயில்லாத ஒருவனையும் சார்ந்து கொண்டார்கள். இவ்வண்ணமாகவே இந்த உலகத்தி லுள்ள மனிதர்கள் யாவருமே இருவ ரின் வருகைக்காக தங்களை ஆயத்த ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இரட்சகர் இயேசு வழியாக உண்டான மீட்பை பெற்றுக் கொண்டவர்கள் நீதி யின் ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திரு க்கின்றார்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்க ளுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்த ம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்த ம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளு வேன் என்று கூறிய ஆண்டவர் இயேசு மறுபடியும் வந்து தம்முடைய வர்களை தம்மோடு சேர்த்துக் கொள்வார். ஆனால் ஆண்டவர் இயே சுவை ஏற்றுக் கொள்ளாத அவபக்தியுள்ளவர்கள் பிசாசை சார்ந்தவ னாகிய அந்திக்கிறிஸ்துவின் வருகையை நோக்கிச் சென்று கொண்டிரு க்கின்றார்கள். இவர்கள் தங்கள் தெரிவின் முடிவானது நித்திய காரிருள் என்பதை உணராதவர்களாக தங்கள் மனதை கடினப்படுத்திக் கொள்கி ன்றார்கள். இப்படிப்பட்டவர்களை குறித்து விமர்சிப்பதிலும், அவர்க ளின் முடிவையும் குறித்து அதிகதிகமாக பேசுவதும்; நாம் தரித்து நின்று விடாதபடிக்கு, முதலாவதாக நாம் நம்முடைய தூய வாழ்வு இவர்க ளால் கறைபடாதபடிக்கு காத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஒருவனும் கெட்டுப் போவது தேவனுடைய சித்தமல்ல. எனவே அவர்க ளின் மனக் குருட்டாட்டம் நீங்கிப் போகும்படியாயும், மனப்பிரகாசமு ள்ள மனக் கண்களை அவர்களும் பெற்றுக் கொள்ளும்படியாயும் நாம் அப்படிப்பட்டவர்களுக்காகவும் தேவனை வேண்டிக் கொள்ள வேண்டும். கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாக நாம் ஆண்டவர் இயே சுவுக்கு முன் நிற்கும்படிக்கு ஆயத்தப்படுவோமாக.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, இந்த உலகத்திலும் அதனுடையவைகளிடத்திலும் நான் அன்புகூராதபடிக்கு, பரம பந்தையப் பொருளின்மேல் நோக்கமாக இருக்கும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:27