புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 21, 2021)

இருதயத்தில் சந்தோஷம்

சங்கீதம் 4:7

அவர்களுக்குத் தானிய மும் திராட்சரசமும் பெரு கியிருக்கிறகாலத்தின் சந் தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த விவசாயியொருவன், அதிகாலமே எழுந்திருந்து தன் தோட்டத்தின் விளைச்சலை சந்தையில் விற்க அவற்றை தன் மாட்டு வண்டிலிலே ஏற்றி, அடுத்த ஊரிலுள்ள சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அந்த வேளையிலே, இன்னுமொரு ஊரிலுள்ள விவசாயியொருவன், பெரும்போக விளைச்ச லின் பலனான அரிசி மூட்டைகளை, தன் லொறி (டுழசசல) மோட்டார் வண்டி யில் ஏற்றி கொண்டு, வேகமாக சந் தைக்கு சென்று கொண்டிருந்தான். அவன் மாட்டு வண்டிலில் சென்று கொண்டிருந்த, விவசாயியை கடந்து செல்லும் போது, “இந்த ஒற்றைமாட்டு வண்டியிலே நத்தை வேகத்திலே போகின்றானே, எப்போது சந்தைக்கு செல்லப் போகின்றான்” என்று தன்னுடன் இருந்து நண்பனிடம் கூறிக் கொண்டு சென்றான். ஒரு மணி நேரம் சென்ற பின்பு, அந்த மாட்டு வண்டியிலே மெதுவாக சென்று கொண்டிருந்த அந்த ஏழை விவசாயி, அந்த லொறி தெருவோரமாக நிற்பதைக் கண்டான். உடனே தன் மாட்டு வண்டியிலிருந்து இறங்கி, அவர்களின் சுக செய்தியை விசாரித்தான். தாங்கள் வந்த லொறியின் சில்லு ஒன்று உடைந்து விட்டதாகவும், அதை திருத்துவதற்கு சந்தை யில் சில பொருட்களை வாங்க வேண்டும் என்றும் கூறினார்கள். அவர் கள் களைத்திருப்பதைக் கண்ட அந்த ஏழை விவசாயி, தன்னிடமிருந்த இளனி இரண்டை வெட்டி அவர்கள் தாகத்திற்கு கொடுத்தான். அவர்க ளிலொருவனை தன்னோடு தன் மாட்டு வண்டியிலே ஏற்றி, அவன் செல்லவேண்டிய கடைக்கு அவனை அழைத்தும் சென்றான். பிரியமான வர்களே, துரிதமாகவும், பகட்டாகவும் இருப்பது வாழ்க்கையல்ல. நம்மிடம் இருப்பதோடே மனரம்யமாக வாழ்வதே வாழ்க்கை. அந்த ஏழை விவாசாயி, தன் வாழ்க்கை முறையை குறித்து நொந்து கொள்ள வில்லை. தன் குறைவிலும் உற்சாக மனதோடு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலையுடையவனாகவே இருந்தான். இன்று மனிதர்கள் மனநிறைவை அடையும்படி இந்த உலகத்திலே திரளான செல்வத்தை தேடுகின்றார்கள் ஆனால் உலக செல்வத்தினால் பெற்றுக் கொள்ள முடியாத மனநிறைவை, தேவனாகிய கர்த்தர் அந்த ஏழை விவசாயிக்கு அருள் செய்திருந்தார்.

ஜெபம்:

மனநிறைவை தரும் நல்ல தேவனே, எல்லா சூழ்நிலைகளிலும் மனநிறைவாக நான் இருக்கும்படிக்கு, பரலோகத்திலிருந்து உண்டாகும் மனச் சந்தோஷத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:12