புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 14, 2021)

மெய்ச் சமாதானம் எங்கே?

கொலோசெயர் 3:15

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது,


மலையிலே அமைதி கிடைக்குமோ? பட்டணத்திலே சமாதானம் இல்லையோ? வீட்டில் நிம்மதி தங்குமோ? என்று பல மனிதர்கள் தங்கள் மனதிலே போராட்டங்களோடு வாழ்ந்து வருகின்றார்கள். இதனிமித்தம் நிம்மதியைத் தேடி நாட்டை விட்டு, ஊரை விட்டு இடம் பெயர்ந்து செல்கின்றார்கள். வீட்டை விற்று வீடு மாறுகின்றார்கள், ஒரு வேலையை விட்டு இன்னுமொரு வேலையைத் தேடுகின்றார்கள் இப்படியாக நண்பர்களையும், உறவு களையும் விட்டு புதிய நண்பர்களையும், உறவுகளையும் தேடுகி ன்றார்கள். இந்த உலகிலே மனித முயற்சியினால் உண்டாகும் சமாதா னமானது ஒரு பொருளை அல்லது ஒரு சூழ்நிலையை மையமாக கொண் டிருக்கும். பொருளும், சூழ்நிலையும் மாறிப் போகும்போது அவர்கள் வாழ்க்கையில் அவைகளினால் உண்டான சமாதானமும் குலைந்து போய்விடுகின்றது. பாவத்திலும் சாபத்திலும் இருந்த நாம் நிலையான சமாதானத்தை உண்டு பண்ணும் பரலோகத்திற்கு பகைஞராக இருந் தோம். அந்தப் பகையிலிருந்து நமக்கு விடுதலையை கொடுக்கும்படி ஆண்டவராகிய இயேசு சிறிஸ்து இந்த உலகக்திலே மனிதனாக பிற ந்தார். அவர் இந்த உலகிலே பிறந்த தினமன்று, பரமசேனையின் திரள் தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமா தானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். நாம் கிறிஸ்துவைச் சேராதவர்களும், தேவ னுடைய சுதந்திரத்திற்கு புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன் படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலக த்தில் தேவனற்றவர்களுமாயிருந்தோம். மீட்பராகிய இயேசு நம்முடைய சமாதான காரணராகி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைச் சிலுவையினால் கொன்று, நிலையான சமாதானமுள்ள பரலோகத்தோடு நம்மை ஒப்புரவாக்கினார். ஆனால் ஆண்டவர் இயேசு கொடுக்கும் பர லோக சமாதானமானது இந்த உலக பொருளுக்கும் சூழ்நிலைக்கும் அப் பாற்பட்டது. “சமாதானத்தை உங்களுக்கு வைத் துப்போகிறேன், என்னு டைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடு க்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இரு தயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே இயேசு தரும் பரலோக சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளும்படிக்கு உங்களை ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, இந்த உலகம் தரும் சமாதானத்தையல்ல, பரலோகத்திலிருந்து வரும் நிலையான சமாதானத்தையே நான் வாஞ்சிக்கின்றேன். உம்முடைய சமாதானத்தை அடியேனுக்குதந்து வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:14

Category Tags: