புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 11, 2021)

தாழ்வில் நம்மை நினைத்த தேவன்

சங்கீதம் 136:23

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியு ங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த தேவ மனிதனானவனொருவனின், ஏழ்மை நிலையைக் கண்டு, அந்த ஊரிலே வாழ்ந்து சில வீணர்கள், தேவன், தேவன் என்று அலைகின்றானே என்று அவனை நகைத்து, ஏளனம் செய்து வந்தார்கள். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தேவ பக்தியு ள்ள அந்த மனிதன், தன் குறைவின் மத்தியிலும், தளர்ந்து போகாமல் ஆண்டவர் இயேசுவை நம்பி வாழ்ந்து வந்தான். பல ஆண்டுகளுக்கு பின் அவன் வாழ்க்கையில் பொரு ளாதர மறுமலர்ச்சி ஏற்பட்டது. அந்த மனிதன், தன் குறைவின் நாட்களிலே, தனக்கு பெலனாக இருந்து, தன்னை வழிநடத்தி வந்த தேவ கிருபையை நினைத்து எப்போதும் தேவனுக்கு நன்றி செலுத்திக் கொள்வான். தேவ ஊழியராகிய பவுல் என்னும் மனி தன், நான் எந்த நிலைமையிலிரு ந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லா வற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூர ணமடை யவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெல னுண்டு என்று தன் வாழ்வைக் குறித்துக் கூறினார். அவருக்கு உண்டான பெலன் தேவனுடைய கிருபையாக இருக்கின்றது. சில வேளைகளிலே, மனிதர்கள் தங்கள் வாழ்வின் மேன்மைகளைக் குறித்து மேன்மையாக பேசிக் கொள்வார்கள். தேவன் தங்களை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று பேசிக் கொள்வார்கள். ஆனால், மரண இருளின் பள்ளத்தாக்கு போன்ற அனுபவங்களை கடந்து வந்த நாட்களிலே, தேவன் தங்களோடு இருந்து, நடத்தி வந்த பெருங்கிருபையை உணராதிருக்கின் றார்கள். சில மனிதர்களின் வாழ்விலே பின்னடைவுகள் ஏற்படும் போது, தங்களை நேசித்த தேவனையே மறந்து போய்விடுகின்றார்கள். சில வேளைகளிலே, பெலவீனத்திலே, மனம் பதறி, விசுவாசத்திற்கு விரோதமான வார்த்தைகளைக்கூட பேசிவிடுகின்றார்கள். ஆனால் அந்த வேளைகளிலும் அவர்களை சூழந்து கொண்டு காத்த தேவ கிருபையை எண்ணாமற்போய்விடுகின்றார்கள். பிரியமானவர்களே, சிறுமைப்பட்ட நாட்களிலும், துன்பத்தின் மத்தியிலும், குறைவான நாட்களிலும் நம்மை நடத்தி வந்த தேவ கிருபையை எண்ணிப்பாருங்கள். நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்;. அவர் கிருபை என்றுமுள்ளது.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, குறைவிலும், நிறைவிலும், உயர்விலும், தாழ்விலும் என்னை நடத்தி வந்த உம்முடைய கிருபையை மறந்துவிடாமல் இருப்பதற்கு நன்றியுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 12:9

Category Tags: