புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 21, 2021)

மனதில் பிரகாசிக்கும் தீபம்

2 பேதுரு 1:10

உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்;


ஒரு இள வயதுள்ள மனிதனாவன், ஒரு குறிப்பிட்ட ஊரை நோக்கி, பயணம் செய்து கொண்டிருந்தான். தான் இன்ன ஊருக்கு போகின்றேன் என்பதை திட்டமாக அறிந்து, சாலையோரமாக நடந்து சென்று கொண்டி ருந்தான். வழியிலே, இன்னும் சில மனிதர்கள் அந்த ஊருக்குச் சென்று கொண்டிருப்பதை அவன் கண்டு கொண்டான். இவன் இவ்வண்ணமாக நடந்து சென்று கொண்டிருக்கும் வேளை யிலே, அவனோடு நடந்து செல்லும் இன்னுமொரு யாத்திரி அந்த இளவய துள்ள மனிதனை நோக்கி: இந்தப் பாதை இன்ன ஊருக்கு போகின்றது. நீ உன் பாதையை மாற்றாமல் இதிலே சென்றால் அந்த ஊருக்கு சென்றடை வாய் என்று கூறினார். அதற்கு அவன் மறுமொழியாக: ஆம், நான் அந்த ஊருக்குத்தான் போகின்றேன் என்று கூறினான். இப்படியாக அவன் செல்லுகையில், இரண்டாவது மனிதனும் அவ் வண்ணமாக கூறினான். அதற்கு அவன் அப்படியே பதில் கூறினான். மூன்றாவதாக வந்த வயது சென்று ஒரு மனிதனும் அவ்வண்ணமாக அவனுக்கு கூறியபோது, அந்த இளவயதுள்ள மனிதன் சற்று சினமடைந்தவனாக, ஏன் இதை எனக்கு திரும்பத் திரும்ப கூறுகின்றீர்கள். நான் அந்த ஊருக்குத்தானே சென்று கொண்டிருக்கின்றேன் என்று சற்று கடுமையாகவே பதிலளித்தான். அதற்கு அந்த வயதானவர் அவனை நோக்கி: தம்பி, இப்போது பகல் நேரமாக இருக்கின்றது நீ தெளிவாக பார்க்கின்றாய், சீக்கிரத்திலே இருள் சூழ்ந்துவிடும், நீ நன்றாக பார்க்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகலாம். அதனால் நீ போகின்ற பாதை இதுதான் என்றும், இது சரியான பாதை என்றும் உன் மனதிலே உறுதி செய்துகொள் என்று கூறினார். பிரியமானவர்களே, நாங்கள் தந்திரமான கட்டுக் கதைகளைப் பின்பற்றுகிறவர்களாயிராமல் தேவனுடைய பரம அழைப்பிற்கு பங்காளி களாக இருக்கின்றோம். நித்திய வாழ்வுக்கென்று தெரிந்து கொள்ளப் பட்ட நமக்கு தேவ வார்த்தையானது திரும்பத் திரும்ப கூறப்படும் போது, அதை அற்பமாக எடுத்துக் கொள்ளாமல் உறுதியாய் உங்கள் உள்ளத்திலே பதித்துக் கொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசு, நம்மை அழைத்துச்; செல்ல மறுபடியும் வருவார். எனவே அந்த நாளுக்கென ஆயத்த முள்ளவராக இருங்கள். இருள் சூழும் அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் போது, இந்த வார்த்தையானது உங்கள் மன திலே ஒளிவீசும் தீபமாக இருக்கட்டும்.

ஜெபம்:

பரம அழைப்பிற்கு என்னை தெரிந்து கொண்ட தேவனே, நம்முடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும், ஒருபோதும் மறந்து விடாதபடிக்கு, எமக்கு நினைப்பூட்டி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:16-21

Category Tags: