புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 18, 2021)

தேவையான நல்ல பங்கு

லூக்கா 10:42

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரி ந்துகொண்டாள் என்றார்.


பட்டணத்திலே இயங்கி வந்த ஒரு சபை ஐக்கியத்திலே அநேக ஜனங் கள் இருந்தார்கள். அவர்கள் கூடிவருவதற்கென நவீன வசதிகள் யா வுமுள்ள ஒரு கட்டிடம் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் கிழமைதோ றும் கூடிவரும் போது, ஆராதனையின் முடிவில் தேநீர் சிற்றூண்;டிகளை பரிமாறிக் கொள்வார்கள். வருடந்தோறும் கன்வென்ஷன், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளையும், புறமனை ஐக்கியம் என்று பல விளையாட்டுப் போட் டிகளையும் நடாத்திக் கொள்வா ர்கள். ஆராதனை வேளையிலே அநேக இசைக்கருவிகளை நேர்த்தியாக வாசி த்து இனிமையான பாடல்களைப் பாடு வார்கள். இவைகள் யாவும் நல்லது ஆனால் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே தேவனுடைய வார்த் தையைக் கேட்டு, அதை தங்கள் வாழ் க்கையில் கைக்கொண்டு வந்தார்கள். பட்டணத்திற்கு தொலைவிலே இரு ந்த ஒரு சிறிய குக்கிராமத்திலே, ஒரு சிறிய கொட்டிலிலே இயங்கி வந்த ஏழ் மையான சபையொன்றிலே, பல விசுவாசிகள் வாரம்தோறும் கூடி தேவனை ஆராதித்து வந்தார்கள். பட்டணத்திலே இயங்கி வந்த சபையிலே நடந்து வரும் நிகழ்ச்சிகளைபோல நடத்துவதற்கு அவர்க ளிடம் எந்த வசதியும் இருந்ததில்லை. ஆனாலும் அவர்களில் சிலர் மட்டுமே தேவனுடைய வார்த்தையை கருத்தோடு கேட்டு, அதை தங் கள் வாழ்க்கையில் கைகொண்டு வந்தார்கள். இந்த இரண்டு சபைகளி லும் தேவனுடைய வார்த்தையை கேட்டு, அதன்படி செய்கின்றவர்களே, உலக காரியங்களினித்தம் கவலையடையாமலும் கலக்கமடையாமலும் தேவனைச் சார்ந்து வாழ்ந்தார்கள். ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு லாசரு என்னும் ஒரு மனிதனுடைய வீட்டிற்குச் சென்றிருந்தார். லாசரு வுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்களில் மரியாள் என்ப வள், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வ தில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக் கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும் படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியு த்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித் துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, எல்லா சூழ்நிலைகளிலும் உம்முடைய வார்த்தையை கேட்டு, அதன்படி நடப்பதையே என் வாழ்வின் கருப்பொருளாக கொண்டிருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 16:6

Category Tags: